2024 தேர்தலில் 10% வாக்குகள் கூடுதலாகப் பெற வேண்டும்: பிரதமர் மோடி!
Sep 12, 2026, 10:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2024 தேர்தலில் 10% வாக்குகள் கூடுதலாகப் பெற வேண்டும்: பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 24, 2023, 06:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில், 2019 தேர்தலில் பெற்றதை விட 10 சதவிகித வாக்குகள் கூடுதலாகப் பெற வேண்டும் என்று பா.ஜ.க. தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் பாரதப் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இத்தேர்தலில் வெற்றிபெற்று 3-வது முறையாக ஹாட்ரிக் சாதனை படைக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தலைவர்கள் உறுதியாக உள்ளனர். மேலும், நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 3 பெரிய மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றி இருப்பதால் தலைவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார்கள்.

எனவே, சூட்டோடு சூடாக நிர்வாகிகளை தயார்ப்படுத்தும் வகையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தொடங்கி விட்டனர். இதன் ஒரு பகுதியாக, பா.ஜ.க. தேசிய நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் மற்றும் மாநிலத் தலைவர்கள் ஆகியோர் அடங்கிய முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 2 நாட்களாக டெல்லியில் நடந்தது.

இக்கூட்டத்தில் முதல்நாள் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வினர் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து விளக்கிக் கூறியிருக்கிறார். அதேபோல, 2-வது நாள் கூட்டத்தில் பங்கேற்ற அமித்ஷா, தேர்தல் தொடர்பான வியூகங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இதனால், டெல்லியில் 2 நாட்கள் நடந்த கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மேலும், கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது 2019-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. 6 சதவீதத்துக்கு மேல் கூடுதலாக வாக்குகளைப் பெற்றது. இதன் மூலம், பா.ஜ.க.வின் மொத்த வாக்கு 37 சதவீதமாக இருந்தது. மேலும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 45 சதவீத வாக்குகளைப் பெற்றது.

ஆகவே, 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தோ்தலில் வெற்றி பெற்றது முதல் 50 சதவீத வாக்கு வங்கியை வசப்படுத்துவதை இலக்காகக் கொண்டு பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த முறை வாக்கு சதவீதத்தை மேலும் 10 சதவீதம் அதிகரிக்க பா.ஜ.க. தலைவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். பிரதமர் மோடியும் கூட்டத்தில் இதையே வலியுறுத்தி பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக வெளியாகி இருக்கும் தகவலில், “2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றதைவிட 2024-ம் ஆண்டு தேர்தலில் 10 சதவீதம் கூடுதலாக வாக்குகளைப் பெற வேண்டும். இதற்காக பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழை, எளிய மக்களை கட்சியினர் சந்தித்துப் பேச வேண்டும்.

தற்போது நடைபெற்று வரும் ‘வளா்ந்த இந்தியாவுக்கான உறுதியேற்பு யாத்திரை’ மூலம் முடிந்த அளவுக்கு அதிக மக்களை கட்சியினர் அணுக வேண்டும். மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் நலத்திட்ட உதவிகள், வளா்ச்சித் திட்டங்களை எடுத்துக் கூற வேண்டும். குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் நிர்வாகிகள் கவனம் செலுத்தாமல், கடந்த தேர்தலைவிட அதிக இடங்களில் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

அதேபோல, கூட்டத்தில் அமித்ஷா பேசுகையில், “நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் செயல்பாடு எதிர்கட்சிகளை திகைப்படையச் செய்வதாக இருக்க வேண்டும். இந்தத் தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க.வுக்கு எதிராக சவால் விடுவதற்கு எதிர்கட்சிகள் ஒருமுறைக்கு பலமுறை யோசிக்கும் நிலையை உருவாக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

மேலும், பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்கட்சியினர் பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபடுவார்கள். தவறான தகவல்களைப் பரப்புவார்கள். இதை நம்பி மக்கள் ஏமாற அனுமதிக்கக் கூடாது. பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சி அமைப்பார் என்ற உறுதியான நம்பிக்கையை மக்கள் மனதில் உருவாக்க வேண்டும். இதற்காக வாக்குச் சாவடி அளவிலான களப் பணிகளை வலுப்படுத்த வேண்டும்.

கட்சியின் தொண்டர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு அதிக அளவிலான மக்களைச் சந்தித்து ஆட்சியின் சிறப்புகளை எடுத்துச் சொல்ல வேண்டும். சமீபத்தில் 3 மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் பெற்ற வெற்றி, கட்சியினருக்கு உற்சாகத்தையும், மக்கள் மத்தியில் பா.ஜ.க. குறித்த நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் அதிகரித்துள்ளது. இவை நாடாளுமன்றத் தோ்தலில் நமக்கு சாதகமான விஷயங்கள்.

மேலும், ஜனவரி மாதம் நடைபெறும் அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை போன்றவை தேர்தலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பேசியதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags: PM ModibjpAmit shanational office bearers meeting
Share
Tweet
SendShare
Previous Post

பீகார் மக்களை கொச்சைப்படுத்தும் திமுக! – அண்ணாமலை கண்டனம்!

Next Post

2023 ஆம் ஆண்டில் சாதனை படைத்த தமிழ் சினிமா!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies