பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் சீன ஆயுதங்கள்: இராணுவம் பகீர் தகவல்!
Sep 13, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் சீன ஆயுதங்கள்: இராணுவம் பகீர் தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 27, 2023, 06:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தான் தீவிரவாதிகள், சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி, ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்தி வருவது அம்பலமாகி இருக்கிறது. இதன் மூலம் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் இராணுவம் உதவி செய்வது உறுதியாகி இருக்கிறது.

பாகிஸ்தான் தீவிரவாதிகள், ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் நமது இராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதையடுத்து, ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. மேலும், இராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே கடந்த திங்கள்கிழமை பூஞ்ச் மாவட்டத்துக்குச் சென்றார். சுரன்கோட், ரஜெளரி மாவட்டம் தானாமண்டி வனப் பகுதிகளில் கடந்த 5 நாட்களாக நடைபெறும் இராணுவ நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, இராணுவ கமாண்டர்களிடம் இராணுவ நடவடிக்கைகளை மிகுந்த தொழில் நோ்த்தியுடன் மேற்கொள்ளுமாறு கமாண்டர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், எந்தவொரு சூழலிலும் உறுதியுடன் இருக்குமாறும் ஊக்கமளித்தார்.

இந்த நிலையில்தான், ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகள் பயன்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள், சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்பது அம்பலமாகி இருக்கிறது.

இதுகுறித்து உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகையில், “ஜெய்ஷ் இ முகமது மற்றும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள், சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், கேமராக்கள் பொருத்தப்பட்ட ஆடைகள், தொலைத்தொடர்பு சாதனங்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி இராணுவ வீரர்களை தாக்குகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது, பாகிஸ்தான் இராணுவத்துக்கு சீனாவிலிருந்து ட்ரோன்கள், கையெறி குண்டுகள், இதர ஆயுதங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், அவை பாகிஸ்தானிலிருந்து இயங்கும் தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகளால் பயன்படுத்தப்படுகின்றன.

இதை தாக்குதல்களின்போது அவர்களால் பயன்படுத்தும்போது கைப்பற்றப்படுகின்றன. இதன் மூலம், பாகிஸ்தான் இராணுவத்துக்கு வரும் ஆயுதங்கள் தீவிரவாத இயக்கங்களுக்கு வழங்கப்படுவது உறுதியாகி இருப்பதாக இந்திய இராணுவம் தெரிவித்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நவம்பர் மாதம், ஜம்மு எல்லையில் நமது இராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், இந்த துப்பாக்கிகள்தான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும், இந்த ஆண்டு நடத்தப்பட்ட 3 தாக்குதல்களிலும், சீனாவின் ஆயுதங்களையே பாகிஸ்தான் தீவிரவாதிகள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

கல்வான் தாக்குதலுக்கு நாம் கொடுத்த பதிலடியால் விரக்தியடைந்த சீனா, ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தை துாண்டிவிட்டு, லடாக் எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கும் நமது இராணுவ வீரர்களை, காஷ்மீருக்கு அனுப்பி திசை திருப்புவதற்காக, இதுபோன்ற உதவிகளை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும், பாகிஸ்தானுக்கான தனி தகவல் பாதுகாப்பு ஆய்வகத்தை அமைக்க, சீனா நிதியுதவியும் அளித்து வருகிறது. எனினும், ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு முனைகளிலும், பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் நமது பாதுகாப்பு படை தகுந்த பதிலடியை கொடுத்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: pakistanterroristChina weapons
Share
Tweet
SendShare
Previous Post

கேஸ் சிலிண்டர் பெற இனி இது கட்டாயம்! – முழு விவரம்!

Next Post

பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடக்குமா? நடக்காதா?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies