"அயோத்தி தாம்" இரயில் நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி!
Sep 13, 2026, 11:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“அயோத்தி தாம்” இரயில் நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 30, 2023, 02:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தியில் புதுப்பிக்கப்பட்ட அயோத்தி தாம் இரயில் நிலையத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

அயோத்தி இராமஜென்ம பூமியில் மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெறவுள்ளது. இக்கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவார்கள்.

மேலும், எதிர்காலத்தில் அயோத்தி இராமர் கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு அயோத்தி நகரின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில், முதல்கட்டமாக அயோத்தியில் அதி நவீன வசதிகளுடன் கூடிய பிரம்மாணட் விமான நிலையம் கட்டப்பட்டிருக்கிறது.

அதேபோல, அயோத்தி இரயில் நிலையம் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் சர்வதேசத் தரத்தில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இரயில் நிலையத்துக்கு அயோத்தி தாம் இரயில் நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்த இரயில் நிலையம், விமான நிலையம் ஆகியவற்றை திறந்து வைப்பதற்காகவும், புதிதாக பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியிலிருந்து புறப்பட்டு அயோத்திக்குச் சென்றார்.

அயோத்தி விமான நிலையத்துக்குச் சென்றடைந்த பிரதமர் மோடியை, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்தி பென் படேல், இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர்.

பின்னர், பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து அயோத்தி தாம் இரயில் நிலையத்துக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். வழியில் சுமார் 15 கி.மீ. தூரத்துக்கும் பிரதமர் மோடி பிரம்மாண்ட ரோடு ஷோவை நடத்தினார். அப்போது, சாலையின் இருபுறமும் கூடியிருந்த மக்கள் பிரதமருக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதன் பிறகு, அயோத்தி தாம் இரயில் நிலையத்தைச் சென்றடைந்த பிரதமர் மோடி, புதிய கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார். மேலும், இரயில் நிலையத்தில் செய்யப்பட்டிருக்கும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து, அயோத்தி தாம் இரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், அம்ரித் பாரத் இரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Tags: PM ModiInaguratesAyodyaRailway Station
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவில் புதிதாக 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Next Post

இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் : இந்தியா பந்துவீச்சு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies