முதல்வர் ஸ்டாலினை "நோஸ்கட்" செய்த பிரதமர் மோடி!
Aug 17, 2026, 06:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல்வர் ஸ்டாலினை “நோஸ்கட்” செய்த பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 2, 2024, 02:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

திருச்சியில் விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழா, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் 19,800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இவ்விழாவில் பங்கேற்பதற்காக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லியிலிருந்து புறப்பட்டு திருச்சியை வந்தடைந்தார். பின்னர், கார் மூலம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்குச் சென்றவர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முதலில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமருக்கு புத்தாண்டு வாழ்த்துகள் என்று கூறி தனது உரையைத் தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், “இன்னார்தான் படிக்க வேண்டும் என்கிற நிலையை மாற்றி அனைவரும் படிக்க வேண்டும் என்று நிலைநாட்டியது திமுக அரசுதான். 100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக் கட்சி ஆட்சியின்போது போடப்பட்ட விதைதான் இன்று கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் உயர்ந்து நிற்கிறது” என்று கூறினார்.

இதன் பிறகு, தனது பேச்சைத் தொடங்கிய பிரதமர் மோடி, நீதிக் கட்சிதான் கல்வியை நிலைநாட்டியதாக கூறிய ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்தார். “வணக்கம் மாணவ சமுதாயமே!” என்று தமிழில் கூறி தனது பேச்சைத் தொடங்கிய பிரதமர் மோடி, “பண்டைய காலத்திலேயே காஞ்சி, மதுரை, கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய நகரங்கள் கல்வியில் சிறந்து விளங்கின. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே காந்தி, அண்ணாமலை செட்டியார் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டு விட்டன” என்று கூறினார்.

அதாவது, தமிழகத்தில் கல்வியைப் புகுத்தியது நீதிக் கட்சி அல்ல, 20-ம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டு விட்டன. மேலும், மதுரை, காஞ்சிபுரம், கங்கை கொண்ட சோழபுரம் உட்பட பல்வேறு நகரங்கள் பண்டைய காலத்திலேயே கல்வியில் சிறந்து விளங்கி இருக்கின்றன என்று கூறி, ஸ்டாலினை நோஸ்கட் செய்திருக்கிறார்.

Tags: PM ModiattacktrichystalinBhararathidasan UniversityGraduation
Share
Tweet
SendShare
Previous Post

தேர்தல் பத்திரங்கள் விற்பனை இன்று தொடக்கம்!

Next Post

இந்தியாவில் புதிதாக 573 பேருக்கு கொரோனா பாதிப்பு! – 2 பேர் பலி!

Related News

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு; திரளான

கோவையில் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் இந்தோ-ஜப்பான் நிறுவனம் : ஹைட்ரஜன் வாகன பயன்பாடுக்கு அடித்தளம் -சிறப்பு தொகுப்பு!

பஹல்காம் தாக்குதலை அறிந்ததும் பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி என்ன? – மனம் திறந்த அஜித் தோவல்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திவ்யாஸ்த்ரா Mk3 ட்ரோன் – வெற்றிகரமாக சோதனை!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை – வனச்சரக அலுவலகம் சூறை, பதற்றம்!

அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம் – நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

Load More

அண்மைச் செய்திகள்

பான் மசாலா விளம்பரம் – ஷாரூக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் ‘வந்தே பாரத் சரக்கு ரயில்!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள் – மீனவர்கள் சாலை மறியல்!

தேசநலனில் ஒன்றுபட வேண்டும் என்பதை சொல்லாலும் செயலாலும் உணர்த்தியவர் வாஜ்பாய் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

தொலைந்துபோன காலணியை கண்டுபிடிக்க சாட்ஜிபிடியை பயன்படுத்திய இளைஞர்!

அருணாச்சலப்பிரதேச தக்ஸிங்கை கைப்பற்றியதா சீனா? : திட்டவட்டமாக மறுக்கும் இந்திய ராணுவம் – சிறப்பு தொகுப்பு!

சென்னை சுதந்திர தின விழாவின் போது மயங்கி விழுந்த காவலர் – மருத்துவமனையில் உயிரிழப்பு!

ஆவணி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

தாய் , தாய் நாடு, தாய்மொழி மீது மிகுந்த அக்கறை கொண்டவன் – நயினார் நாகேந்திரன் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies