அயோத்தியில் மார்ச் 25 வரை தினமும் 50,000 பேர் தரிசனம்: நட்டா தகவல்!
Jun 23, 2026, 07:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தியில் மார்ச் 25 வரை தினமும் 50,000 பேர் தரிசனம்: நட்டா தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 3, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி இராமர் கோவிலில் ஸ்ரீராமர் லல்லா பிரதிஷ்டை செய்யப்படும் ஜனவரி 22-ம் தேதியை தீபாவளி போல கொண்டாட வேண்டும் என்று கூறியிருக்கும் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, கும்பாபிஷேகம் முடிந்து ஜனவரி 25 முதல் மார்ச் 25-ம் தேதி வரை தினமும் 50,000 பேர் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, “அயோத்தியில் உள்ள இராமர் கோவிலில் ஸ்ரீராமர் லல்லா பிரதிஷ்டை செய்யப்படும் ஜனவரி 22-ம் தேதியை நாட்டில் தீபாவளி போல கொண்டாடும் சூழலை பா.ஜ.க.வினர் உருவாக்க வேண்டும்.

அதேபோல, அயோத்திக்கு தரிசனத்திற்காக வரும் ஒவ்வொரு நபருக்கும் பா.ஜ.க. தொண்டர்கள் உதவ வேண்டும். யாரும் சிரமப்படாமல் பாரபட்சமின்றி தரிசனம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், ஜனவரி 25 முதல் மார்ச் 25-ம் தேதி வரை அயோத்தி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இது தொடர்பாக பா.ஜ.க. பிரச்சாரத்தை மேற்கொள்ளும். இப்பிரச்சாரத்தின் மூலம் தினமும் 50,000 பேர் தரிசனம் செய்ய பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்வார்கள்.

மக்கள் தங்கள் சொந்த செலவில் இராமர் கோவிலுக்குச் செல்வார்கள். அதேசமயம், அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடு உள்ளிட்டவற்றுக்கு பா.ஜ.க. உதவும். மேலும், பக்தர்கள் எளிதில் அயோத்திக்கு செல்லும் வகையில், 430 நகரங்களில் இருந்து அயோத்திக்கு தினமும் 35 இரயில்கள் இயக்கப்படும்” என்று கூறியிருக்கிறார்.

இக்கூட்டத்தில், 2024 நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், பா.ஜ.க. பொதுச்செயலாளர் சுனில் பன்சால், மத்திய அமைச்சர்கள் பூபேந்தர் யாதவ், அஸ்வினி வைஷ்ணவ், மன்சுக் மாண்டவியா, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: bjpJ.P.NaddaExecutive Meeting
ShareTweetSendShare
Previous Post

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அதிரடி நடவடிக்கை!

Next Post

இஸ்ரோ தனது அடுத்த செயற்கைக்கோளை SpaceX ராக்கெட்டில் செலுத்தவுள்ளது!

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies