மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்த வனத்துறையினர்!
Jun 14, 2026, 04:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்த வனத்துறையினர்!

நீலகிரியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது! 

Murugesan M by Murugesan M
Jan 7, 2024, 05:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா கிராமத்தில், சிறுத்தை ஒன்று கடந்த சில நாட்களாக மனிதர்களை தாக்கி அச்சுறுத்தி வந்தது.

இந்நிலையில், மேங்கோ ரேஞ்ச் பகுதி அங்கன்வாடியில் இருந்து தனது  3 வயது குழந்தையை அழைத்துக்கொண்டு தாய் நேற்று நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது,தேயிலை தோட்டத்தில் மறைந்திருந்த சிறுத்தை தாயின்  கண்முன்னே சிறுமியை தாக்கி இழுத்துச் சென்றது. தாயின் அலறல் சத்தத்தை கேட்ட  தொழிலாளர்கள், தேயிலை தோட்டம் முழுவதும் சிறுமியை தேடினர். பின்  படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி,பந்தலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை  பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் சிறுத்தையை பிடிக்க உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.இதேபோல் சில நாட்களுக்கு முன் சிறுத்தை தாக்கி பழங்குடியின பெண் உயிரிழந்தார்.

இதனையடுத்து சிறுத்தையை பிடிக்க 6 கூண்டுகள் வைக்கப்பட்டன. மேலும், மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க 2 கால்நடை மருத்துவர்கள் உட்பட 50- க்கும் மேற்பட்ட வனத் துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் அம்பரோஸ் பகுதியில் புதரில் பதுங்கியிருந்த சிறுத்தையை    மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். பின்னர் அந்த சிறுத்தை கூண்டில் அடைக்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது.

Tags: Nilgirisleopard caughtBandalurBandalur Government Hospital.
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி கோவில் கும்பாபிஷேகம்: உ.பி. சிறைகளில் நேரடி ஒளிபரப்பு!

Next Post

2047-க்குள் 35 ட்ரில்லியன் பொருளாதாரத்தை இந்தியா அடையும்: பியூஷ் கோயல்!

Related News

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies