நல்ல நிகழ்வுகளை புறக்கணிக்கும் எதிர்கட்சிகள்: அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு!
Jul 29, 2026, 07:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நல்ல நிகழ்வுகளை புறக்கணிக்கும் எதிர்கட்சிகள்: அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 18, 2024, 03:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 10 ஆண்டுகளாகவே, நாட்டில் எந்த நல்ல நிகழ்வுகள் நடந்தாலும் அதை புறக்கணிப்பதை எதிர்கட்சிகள் வாடிக்கையாக வைத்திருக்கின்றன என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம், இராம் லல்லா சிலை பிரதிஷ்டை, திறப்பு விழா ஆகியவை வரும் 22-ம் தேதி நடைபெறுகின்றன.

இதையொட்டி, ஜனவரி 14-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள கோவில்கள் மற்றும் புனிதத் தலங்களை சுத்தம் செய்யுமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன்படி, நாட்டில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. தலைவர்கள் உள்ளிட்டோர் கோவில்களை சுத்தம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், புதுடெல்லி மந்திர் மார்க்கில் அமைந்திருக்கும் வால்மீகி கோவில் வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரும், டெல்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவாவும் ஈடுபட்டனர்.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சி பலனளிக்கத் தொடங்கி இருக்கிறது. நாட்டு மக்கள் தங்களது வழிபாட்டுத் தலங்களை தூய்மை செய்வதில் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

டெல்லியில் ஆம் ஆத்மி நடத்திய சுந்தரகாண்டம் பாராயணம் அரசியல் ஆதாய நிகழ்வாகும். கடந்த 10 ஆண்டுகளில் டெல்லியிலுள்ள கோவில்கள் மற்றும் அர்ச்சகர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் என்ன செய்தார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

இராம பக்தர்களை இராமரிடம் இருந்து விலக்கி வைக்கும் காங்கிரஸ் கட்சியின் முயற்சி மிகவும் மோசமானது. ஆகவே, காங்கிரஸ் கட்சியை மக்கள் புறக்கணிப்பார்கள். அதேபோல, எப்போது பார்த்தாலும் சனாதனத்தை இழிவுபடுத்துவது மற்றும் ஒழிப்பது பற்றியே இண்டி கூட்டணி பேசி வருகிறது.

ஸ்ரீராமரைப் பற்றி எதிர்கட்சிகள் எவ்வளவு பேசினாலும் கடைசியில் அவர்கள் ஸ்ரீராமரிடம்தான் அடைக்கலம் புக வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் எந்த நல்லது நடந்தாலும் அவற்றை புறக்கணிப்பதை எதிர்கட்சிகள் வாடிக்கையாக வைத்திருக்கின்றன.

இதுபோன்ற காரணங்களுக்காகவே மக்கள் காங்கிரஸ் கட்சியை புறக்கணிக்கிறார்கள். இதை காங்கிரஸ் கட்சியினர் அறிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா, பிரதமர் மோடியின் உரை, மகரிஷி வால்மீகி விமான நிலையம், வந்தே பாரத் இரயில்கள் ஆகிவற்றை புறக்கணித்தனர்.

தற்போது அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை புறக்கணிக்கின்றனர். இதனால் மக்கள் தங்களை மீண்டும் புறக்கணிக்கலாம் என்று எதிர்கட்சியினர் உணரத் தொடங்கி இருக்கிறார்கள்” என்றார்.

Tags: Anurag ThakurtempledelhiCleans
ShareTweetSendShare
Previous Post

கேதார்நாத்தில் கடும் பனிப்பொழிவு!

Next Post

அயோத்தியில் ஏஐ தொழில்நுட்பத்துடன் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies