நல்ல நிகழ்வுகளை புறக்கணிக்கும் எதிர்கட்சிகள்: அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு!
Sep 13, 2026, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நல்ல நிகழ்வுகளை புறக்கணிக்கும் எதிர்கட்சிகள்: அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 18, 2024, 03:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த 10 ஆண்டுகளாகவே, நாட்டில் எந்த நல்ல நிகழ்வுகள் நடந்தாலும் அதை புறக்கணிப்பதை எதிர்கட்சிகள் வாடிக்கையாக வைத்திருக்கின்றன என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம், இராம் லல்லா சிலை பிரதிஷ்டை, திறப்பு விழா ஆகியவை வரும் 22-ம் தேதி நடைபெறுகின்றன.

இதையொட்டி, ஜனவரி 14-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள கோவில்கள் மற்றும் புனிதத் தலங்களை சுத்தம் செய்யுமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன்படி, நாட்டில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. தலைவர்கள் உள்ளிட்டோர் கோவில்களை சுத்தம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், புதுடெல்லி மந்திர் மார்க்கில் அமைந்திருக்கும் வால்மீகி கோவில் வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரும், டெல்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவாவும் ஈடுபட்டனர்.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சி பலனளிக்கத் தொடங்கி இருக்கிறது. நாட்டு மக்கள் தங்களது வழிபாட்டுத் தலங்களை தூய்மை செய்வதில் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

டெல்லியில் ஆம் ஆத்மி நடத்திய சுந்தரகாண்டம் பாராயணம் அரசியல் ஆதாய நிகழ்வாகும். கடந்த 10 ஆண்டுகளில் டெல்லியிலுள்ள கோவில்கள் மற்றும் அர்ச்சகர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் என்ன செய்தார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

இராம பக்தர்களை இராமரிடம் இருந்து விலக்கி வைக்கும் காங்கிரஸ் கட்சியின் முயற்சி மிகவும் மோசமானது. ஆகவே, காங்கிரஸ் கட்சியை மக்கள் புறக்கணிப்பார்கள். அதேபோல, எப்போது பார்த்தாலும் சனாதனத்தை இழிவுபடுத்துவது மற்றும் ஒழிப்பது பற்றியே இண்டி கூட்டணி பேசி வருகிறது.

ஸ்ரீராமரைப் பற்றி எதிர்கட்சிகள் எவ்வளவு பேசினாலும் கடைசியில் அவர்கள் ஸ்ரீராமரிடம்தான் அடைக்கலம் புக வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் எந்த நல்லது நடந்தாலும் அவற்றை புறக்கணிப்பதை எதிர்கட்சிகள் வாடிக்கையாக வைத்திருக்கின்றன.

இதுபோன்ற காரணங்களுக்காகவே மக்கள் காங்கிரஸ் கட்சியை புறக்கணிக்கிறார்கள். இதை காங்கிரஸ் கட்சியினர் அறிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா, பிரதமர் மோடியின் உரை, மகரிஷி வால்மீகி விமான நிலையம், வந்தே பாரத் இரயில்கள் ஆகிவற்றை புறக்கணித்தனர்.

தற்போது அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை புறக்கணிக்கின்றனர். இதனால் மக்கள் தங்களை மீண்டும் புறக்கணிக்கலாம் என்று எதிர்கட்சியினர் உணரத் தொடங்கி இருக்கிறார்கள்” என்றார்.

Tags: Anurag ThakurtempledelhiCleans
Share
Tweet
SendShare
Previous Post

கேதார்நாத்தில் கடும் பனிப்பொழிவு!

Next Post

அயோத்தியில் ஏஐ தொழில்நுட்பத்துடன் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies