மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வருகிறது புதிய திட்டம்!
Aug 2, 2026, 06:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வருகிறது புதிய திட்டம்!

Murugesan M by Murugesan M
Feb 8, 2024, 11:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மற்றும் மெட்டா நிறுவனம் இணைந்து ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் மெட்டா நிறுவனம் இணைந்து மாணவர்களுக்கு தங்களின் தேர்வுகளுக்கு முன்னதாக ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க உதவும் பான்-இந்தியா என்ற புதிய திட்டத்தைத் அறிமுகப்படுத்துகிறது.

டெல்லியில் பிப்ரவரி 12 ஆம் தேதி இந்த திட்டத்தை மெட்டா மற்றும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் செயல்படுத்தவுள்ளது.

இந்த திட்டம் பாரத பிரதமர் மோடியின் பரிக்‌ஷா பே சார்ச்சா திட்டத்துடன் ஒத்துப்போகும் என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனூங்கோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ” தேர்வுகள் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராகும் போது பெற்றோர்களும் அவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள்.

பாரத பிரதமர் மோடியின் பரிக்‌ஷா பே சார்ச்சா திட்டத்தின் ஆறாவது பதிப்பை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கொண்டாடுகிறது.

இது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் தேர்வு மன அழுத்தத்தைப் பற்றிய பார்வையை மாற்றுவதையும், தேர்வுகளின் போது அவர்களின் கவலையைப் போக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது ” என்று கூறினார்.

மேலும் அவர், ” மாணவர்களின் மழுத்தத்தை குறைக்கும் இந்த பான் – இந்தியா திட்டத்தில் மெட்டா போன்ற நிறுவனங்கள் தங்களின் ஆதரவை அளிப்பது பாராட்டத்தக்கது. ” எனக் கூறினார்.

தேர்வு நேரத்தில் மாணவர்களின் மன அழுத்தத்தை நாங்கள் உணர்ந்து, அவர்களின் நல்வாழ்வை ஆதரிப்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று மெட்டா நிறுவனத்தின் பொதுக் கொள்கையின் தலைவர் நடாஷா ஜோக் கூறியுள்ளார்.

மேலும் அவர், ” மாணவர்களிடையே தேர்வு அழுத்தத்தைக் கண்டறிய NCPCR உடன் கூட்டு சேருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மாணவர்களுக்கு மன அழுத்தத்தைத் உண்டாக்கும் காரணிகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்யவும், மாணவர்கள் ஓய்வெடுக்க உதவவும் தயாராக உள்ளோம்,” என்று கூறினார்.

அதேபோல் மெட்டா நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளில் “தேர்வுக்கு அப்பால்: தேர்வு அழுத்தத்தை நிர்வகித்தல்” என்ற வழிகாட்டி புத்தகம், பாதுகாப்பு கருவிகள் மற்றும் பல அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

Tags: A new program is coming to reduce the stress of students!
ShareTweetSendShare
Previous Post

கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியடைந்த புவி அறிவியல் துறை!

Next Post

விவசாயிகளைக் கைது செய்யும் முடிவை, உடனடியாகக் கைவிட வேண்டும்! – அண்ணாமலை

Related News

கடல்வழியாக அலை அலையாக குவியும் மொராக்கோ அகதிகள் : ஸ்பெயின் எல்லையில் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

காவிரி, மேகதாது விவகாரம் – தமிழக முதல்வருக்கு கர்நாடக பாஜக மாநில தலைவர் கடிதம்!

பிரதமர் மோடியின் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

கேரளாவில் தொடரும் மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

கரப்பான்களின் நிதி மற்றும் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் – தகவல் அறியும் உரிமை ஆர்வலர் வலியுறுத்தல்!

கோவை அரபிக் கல்லூரிக்கு வசூலிக்கப்பட்ட நிதி – பயங்கரவாத கருத்துக்களை பரப்ப செலவிட்டது அம்பலம்!

Load More

அண்மைச் செய்திகள்

சமூகம் மற்றும் நாட்டின் நலன் மீது அக்கறை கொள்ளும் வகையில் இளைஞர்களை உருவாக்க வேண்டும் – பிரதமர் மோடி

மைசூரில் சுவாமி விவேகானந்தர் கலாசார இளைஞர் மையம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

கர்நாடகாவுக்கு வர வேண்டாம் என சிவக்,குமார் கூறுவது தமிழக முதல்வரை அவமதிக்கும் செயல் – நயினார் நாகேந்திரன்

மேகதாது அணைக்கு எதிர்ப்பு – தஞ்சையில் தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம்!

நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு விடுவிப்பு – தமிழக அரசு உத்தரவு!

காமன்வெல்த் குத்துச்சண்டையில் 7 தங்கம், 3 வெள்ளி – இந்தியா அபாராம்!

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயார் – டி.கே சிவகுமார்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு 2,117 கோடி நிதி – முன்கூட்டியே விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல்!

நிரம்பிய கபினி அணை; 12,000 கன அடி உபரிநீர் திறப்பு

பிரதமர் மோடியின் பதிவு நீக்கப்பட்ட விவகாரம் : META மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு – சிறப்பு கட்டுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies