அரசியலுக்கு பலியாகி இருந்த ரயில்வே துறை, தற்போது எளிதாக பயணிக்கிறது : பிரதமர் மோடி 
Jun 15, 2026, 02:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசியலுக்கு பலியாகி இருந்த ரயில்வே துறை, தற்போது எளிதாக பயணிக்கிறது : பிரதமர் மோடி 

Murugesan M by Murugesan M
Feb 26, 2024, 03:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியலுக்கு பலியாகி இருந்த ரயில்வே துறை3,  தற்போது எளிதாக பயணிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று சுமார் 41,000 கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும்,  நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

நாட்டில் முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களின்  எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு அம்ரித் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. முதல்கட்டமாக கடந்த ஆண்டில் 508 ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மேம்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில்,  நாடு முழுவதும் சுமார் 41,000 கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரயில்வே உள்கட்டமைப்புத் திட்டங்களை வீடியோ கான்பரன்சிங் வாயிலாக தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும்,  நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

தமிழகத்தில் சென்னை கடற்கரை, பூங்கா, அம்பத்தூர், பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, ஈரோடு, மொரப்பூர், திண்டுக்கல், தூத்துக்குடி,  திருச்செந்தூர், மயிலாடுதுறை, கும்பகோணம், விருத்தாச்சலம், தர்மபுரி, ஒசூர் உள்ளிட்ட 34 ரயில் நிலையங்கள் உலகத்தரத்தில் மேம்படுத்தப்பட உள்ளன.

விழாவில் பேசிய பிரதமர் மோடி, பாரதம் தற்போது பெரிய கனவுகளை காண்கிறது. அதனை அடைய இரவும் பகலும் உழைக்கிறது என தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் புதிய இந்தியா கட்டப்படுவதை மக்கள் பார்த்துள்ளனர். வந்தே பாரத் ரயில்கள் தொடங்குதல், தூய்மை மற்றும் தண்டவாளங்களை மின்மயமாக்குதல் உள்ளிட்ட ரயில்வேயில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை சுட்டிக்  காட்டினார்.

முந்தைய அரசாங்கங்கள் பொதுப்பணத்தை கொள்ளை அடித்ததாகவும், அது பாஜக ஆட்சியில் நிறுத்தப்பட்டு   சம்பாதித்த ஒவ்வொரு பைசாவும் ரயில்வே சேவைகளை விரிவுபடுத்தப் பயன்படுத்தப்பட்டதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இந்திய ரயில்வே துறை அரசியலுக்கு பலியாகி இருந்தது, ஆனால் தற்போது அதுவே எளிதாகப் பயணம் செய்வதற்கான முக்கிய அடிப்படையாக உள்ளது என்றும், அது ஒரு பெரிய வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனமாக உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இளைஞர்களின் கனவுகளும், கடின உழைப்பும் எனது உறுதியும் விக்சித் பாரத் உத்தரவாதம் என்றும் அவர் கூறினார்.

இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் அஸ்வின் வைஷ்ணவ்,  ராவ் சாககேப் பாட்டில் தன்வே, தர்ஷனா ஜர்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாடு முழுவதும் மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள்  கலந்து கொண்டனர். சென்னை பரங்கிமலையில் நடைபெற்ற த விழாவில் தமிழக ஆளுநர்  ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.

Tags: PM ModiNarendra Moditamilnadubjp governmentRail infra projects
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் 34 இரயில் நிலையங்கள் நவீனமயம்! – அடிக்கல் நாட்டிய மோடி!

Next Post

22 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தீவிரவாதி கைது!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies