குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது! - அகதிகள் கொண்டாட்டம்!
Jun 23, 2026, 11:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது! – அகதிகள் கொண்டாட்டம்!

Murugesan M by Murugesan M
Mar 12, 2024, 07:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்ததையடுத்து நாடு முழுவதும் உள்ள அகதிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசு நேற்று (மார்ச் 11) அறிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது தொடர்பான அரசிதழிலை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தச் சட்டமானது, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து 2014, டிசம்பர் 31-க்கு முன்னதாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம்கள் அல்லாத மதச் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது. இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜெயின்கள், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகுக்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியதை அடுத்து, நாட்டில் உள்ள அகதிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பிரதமர் மோடிக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

இராஜஸ்தான் ஜோத்பூரில் உள்ள பாகிஸ்தான் அகதிகள், பட்டாசு வெடித்தும், மேளம் கொட்டியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மோடி வாழ்க எனவும், பாரத் மாதா கி ஜே என கோஷம் எழுப்பினர்.

டெல்லியில் உள்ள மஜ்னு கா தில்லாவில் வசிக்கும் பாகிஸ்தானிய புலம்பெயர்ந்தோர்கள் வண்ணப் பொடிகளை பூசி, தங்களுக்கு ஹோலி  ஆரம்பமாகி இருப்பதாக தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் அகதிகள் வண்ணப் பொடிகளை ஒருவருக்கொருவர் பூசி மகிழ்ந்தனர்.

“நாங்கள் எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக இங்கு வந்தோம். நாங்கள் இப்போது பாரத மாதாவைச் சேர்ந்தவர்கள். நாங்கள் இங்கு வாழ்கிறோம், எங்களுக்கு முன்னதாக தீபாவளி வந்துள்ளது, அதனை கொண்டாடுகிறோம். இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி என அகதி ஒருவர் தெரிவித்தார்.

“மதத்தின் அடிப்படையில் நாடு பிளவுபட்டது. நாங்கள் சாக விடப்பட்டோம்.. மிகவும் கஷ்டப்பட்டு இங்கு வந்தோம். நாங்கள் எங்கும் சேரவில்லை. இப்போது இந்திய அரசு CAA ஐ அமல்படுத்தியுள்ளது. எனவே, இது பெருமைக்குரிய விஷயம், அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது”  எனவும் இது மேலும் ஒரு அகதி தெரிவித்தார்.

Tags: Citizenship Amendment Act! - Refugee celebration!
ShareTweetSendShare
Previous Post

உலகம் முழுவதும் எதிரொலித்த முப்படைகளின் ஒத்திகை : பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

பாஜக ஆட்சியில் தமிழகத்தில் கள்ளுக்கடை திறக்கப்படும்! – அண்ணாமலை

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies