குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது! - அகதிகள் கொண்டாட்டம்!
Aug 8, 2026, 05:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது! – அகதிகள் கொண்டாட்டம்!

Murugesan M by Murugesan M
Mar 12, 2024, 07:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்ததையடுத்து நாடு முழுவதும் உள்ள அகதிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசு நேற்று (மார்ச் 11) அறிவித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது தொடர்பான அரசிதழிலை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தச் சட்டமானது, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து 2014, டிசம்பர் 31-க்கு முன்னதாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம்கள் அல்லாத மதச் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது. இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜெயின்கள், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகுக்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியதை அடுத்து, நாட்டில் உள்ள அகதிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பிரதமர் மோடிக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

இராஜஸ்தான் ஜோத்பூரில் உள்ள பாகிஸ்தான் அகதிகள், பட்டாசு வெடித்தும், மேளம் கொட்டியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மோடி வாழ்க எனவும், பாரத் மாதா கி ஜே என கோஷம் எழுப்பினர்.

டெல்லியில் உள்ள மஜ்னு கா தில்லாவில் வசிக்கும் பாகிஸ்தானிய புலம்பெயர்ந்தோர்கள் வண்ணப் பொடிகளை பூசி, தங்களுக்கு ஹோலி  ஆரம்பமாகி இருப்பதாக தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் அகதிகள் வண்ணப் பொடிகளை ஒருவருக்கொருவர் பூசி மகிழ்ந்தனர்.

“நாங்கள் எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக இங்கு வந்தோம். நாங்கள் இப்போது பாரத மாதாவைச் சேர்ந்தவர்கள். நாங்கள் இங்கு வாழ்கிறோம், எங்களுக்கு முன்னதாக தீபாவளி வந்துள்ளது, அதனை கொண்டாடுகிறோம். இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி என அகதி ஒருவர் தெரிவித்தார்.

“மதத்தின் அடிப்படையில் நாடு பிளவுபட்டது. நாங்கள் சாக விடப்பட்டோம்.. மிகவும் கஷ்டப்பட்டு இங்கு வந்தோம். நாங்கள் எங்கும் சேரவில்லை. இப்போது இந்திய அரசு CAA ஐ அமல்படுத்தியுள்ளது. எனவே, இது பெருமைக்குரிய விஷயம், அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது”  எனவும் இது மேலும் ஒரு அகதி தெரிவித்தார்.

Tags: Citizenship Amendment Act! - Refugee celebration!
Share
Tweet
SendShare
Previous Post

உலகம் முழுவதும் எதிரொலித்த முப்படைகளின் ஒத்திகை : பிரதமர் மோடி பெருமிதம்!

Next Post

பாஜக ஆட்சியில் தமிழகத்தில் கள்ளுக்கடை திறக்கப்படும்! – அண்ணாமலை

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies