கடல் சீற்றம், வீட்டுக்குள் புகுந்த கடல் நீர்! - சேதமடைந்தன வீடுகள்!
Sep 13, 2026, 04:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடல் சீற்றம், வீட்டுக்குள் புகுந்த கடல் நீர்! – சேதமடைந்தன வீடுகள்!

Murugesan M by Murugesan M
Apr 2, 2024, 04:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேரளா கொல்லத்தில் கடல் சீற்றம் காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வீடுகள் சேதமடைந்தன. இதில் பாதிக்கப்பட்ட மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

ஆலப்புழா, திருவனந்தபுரம், கொல்லம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் கடுமையான கடல் சீற்றம் காரணமாக மாநிலத்தில் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நான்கு மாவட்டங்களில் 500 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

சுமார் 100 குடும்பங்கள் இடம்பெயர்ந்தனர். கடலுக்குள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராதவிதமாக எழும்பிய அலைகள், கடலோர மக்களிடையே சுனாமி அச்சத்தை ஏற்படுத்துள்ளது. வழக்கமாக இம்மாவட்டத்தில் மே, ஜூன், ஜூலை மாதங்களில் பருவமழையால் கடல் சீற்றம் இருக்கும்.

ஆனால், வழக்கத்துக்கு மாறாக நேற்று மாலையில் திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் மீனவ கிராமங்களில் கடலரிப்பு தடுப்புச் சுவர்களைத் தாண்டி கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மீனவ மக்கள்வெளியேறினர்.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், சாலையிலேயே உணவு சமைக்க நேரிட்டது. அப்பகுதி மக்கள் முண்டக்கல் – இரவிபுரம் கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து அவதிப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வெடிக்குன்னு பகுதியில் கடந்த 4 மாதங்களாக கடல் அரிப்பு அதிகமாக உள்ளது. அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

இங்கு மீனவர்கள் மற்றும் வீட்டு வேலை செய்யும் ஏழைகள் வசிக்கின்றனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த ஏழை மக்கள் போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

கொல்லம் கடலோரப் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததில் சுமார் 5 வீடுகள் சேதமடைந்துள்ளன. முழுமையாகவோ, பகுதியாகவோ வீடுகளை இழந்தவர்களுக்கு, வீடுகளை சீரமைக்க அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இத போல் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டு, மீனவ கிராமங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: KeralaSea ragesea water entered the house! - Damaged houses!
Share
Tweet
SendShare
Previous Post

ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் : 112 பேர் கொண்ட பாஜக வேட்பாளர் பட்டியல்!

Next Post

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies