சென்னையில் விரைவில் குளிரூட்டப்பட்ட புறநகர் ரயில் சேவைகள்!
Sep 14, 2026, 05:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் விரைவில் குளிரூட்டப்பட்ட புறநகர் ரயில் சேவைகள்!

Murugesan M by Murugesan M
May 7, 2024, 07:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை கடற்கரை – செங்கல் பட்டு வழித்தடத்தில் குளிரூட்டப்பட்ட புறநகர் ரயில் சேவைகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை வரவில்லை. கால தாமதத்திற்கு காரணம் என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…..

சென்னை, மும்பாய், டெல்லி, கொல்கத்தா ஆகிய பெருநகரங்களின் வளர்ச்சியை பொறுத்தே இந்தியாவின் பொருளாதாரம் தீர்மானிக்கப்படுகிறது.

பாஜக ஆட்சியில் 4 பெருநகரங்களிலும் அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் இரயில்வே துறை கண்டிருக்கும் முன்னேற்றம் முன் எப்போதும் இல்லாதது ஆகும். வந்தே பாரத் ரயில் அறிமுகம் ஆகட்டும், அமிர்த பாரத் ரயில் நிலையங்கள் ஆகட்டும், புல்லட் ரயில் சாதனையாகட்டும், இந்திய இரயில்வே துறை பல புதுமையான சாதனைகளை செய்து வருகிறது.

இந்த வரிசையில், குளிரூட்டப்பட்ட புறநகர் இரயில் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி, மும்பையில் முதல் முதலாக தொடங்கப்பட்ட இந்த குளிரூட்டப்பட்ட புறநகர் ரயில் சேவை போரிவிலி ரயில் நிலையத்தில் இருந்து சர்க்கேட் வரை இயக்கப்படுகிறது.

மும்பைக்கு கிடைத்தது போல் நாட்டில் உள்ள எல்லா மாநகரங்களுக்கும் குளிரூட்டப்பட்ட புறநகர் ரயில் சேவை கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த மத்திய அரசு, இதற்காக திட்ட வரைவு அறிக்கைகள் தயாரித்து, அதற்கான செயல் திட்டங்களும் வேக வேகமாக முன்னெடுத்தது.

குறிப்பாக சென்னையில் குளிரூட்டப்பட்ட புறநகர் ரயில்களை இயக்க முடிவு செய்துள்ள ரயில்வே வாரியம், சென்னை ICF தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் 2 AC EMU-க்கள் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இதன் முதல் பகுதி இந்த ஆண்டும், இரண்டாவது பகுதி 2025ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் குளிரூட்டப்பட்ட புறநகர் ரயில்களை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது குறித்த தரவுகளை, தெற்கு ரயில்வே இடமிருந்து மெட்ரோ இரயில் நிறுவனம் சேகரித்து ஆய்வுகள் செய்து முடித்திருக்கிறப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மும்பையில் குளிரூட்டப்பட்ட புறநகர் ரயில் செயல்பாடுகள், கட்டண அமைப்பு, செயல்பாட்டு செலவு மற்றும் நிறுவன அமைப்பு உட்பட பல விஷயங்கள் குறித்தும் ஆய்வுகள் நடந்து வருவதுடன், ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் இந்த குளிரூட்டப்பட்ட புறநகர் ரயில் சேவைக்கான ஆய்வுகள் நடத்துவதால் தான், சென்னையில் குளிரூட்டப்பட்ட புறநகர் ரயில் சேவை தொடங்குவதற்கு காலம் தாமதம் ஆகிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள் .

குளிரூட்டப்பட்ட புறநகர் ரயில் சேவைகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், தாமதத்துக்கு காரணம் குறித்து சரியான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை.

எது எப்படியோ சென்னையில் குளிரூட்டப்பட்ட புறநகர் ரயில் சேவை விரைவில் வந்தால் போதும் என்கிறார்கள் சென்னை மற்றும் புறநகர்வாசிகள்….

Tags: Air-conditioned suburban train services in Chennai soon!
Share
Tweet
SendShare
Previous Post

ஒவ்வொரு மனிதனிடமும் நன்மை, தீமை ஆகிய இரண்டையும் காணும் திறன் உள்ளது! – குடியரசுத் தலைவர்

Next Post

மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து ரயில்களிலும் சீட்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies