நாடு முழுவதும் நடைபெற்ற சிபிஎஸ்இ பத்தாம் மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் மாணவர்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
சிபிஎஸ்இ பாடத்திட்ட பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ மாணவியர் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிபிஎஸ்இ பாடத்திட்ட பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ மாணவியர் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் அடுத்த முறை சிறப்பாகப் படித்து, முழு நம்பிக்கையுடன் தேர்வெழுதி…
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) May 13, 2024
தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் அடுத்த முறை சிறப்பாகப் படித்து, முழு நம்பிக்கையுடன் தேர்வெழுதி வெற்றி பெறவும், இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
பாரதத்தின் வருங்காலச் சிற்பிகளான மாணவர்கள் அனைவருக்கும், மிகச் சிறப்பான எதிர்காலத்தை ஆண்டவன் அருளட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.