ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தை அவமானப்படுத்திப் பேசியிருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Jul 1, 2026, 11:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தை அவமானப்படுத்திப் பேசியிருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Jul 3, 2024, 06:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக மக்கள் அனைவரையும், பிச்சைக்காரர்கள் என்ற ரீதியில் தொடர்ச்சியாக கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கும் திமுகவின் ஆணவப் போக்கும், ஆர்.எஸ்.பாரதியின் வாய்த்துடுக்கும் கடும் கண்டனத்துக்குரியது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில்,

எப்போதெல்லாம், திமுக ஆட்சிக்கு, பொதுமக்களிடையே பலத்த எதிர்ப்பு வருகிறதோ, அப்போதெல்லாம், அறிவாலய வாசலிலேயே இருக்கும் ஆர்.எஸ்.பாரதியை ஏவி விடுவார்கள் போல, கள்ளக்குறிச்சியில், திமுக ஆதரவோடு நடந்த கள்ளச்சாராய விற்பனையில் 65 உயிர்கள் பலியானதை மடைமாற்ற,  ஆர்.எஸ்.பாரதியைக் களமிறக்கியிருக்கிறார்கள்.

முன்பு ஒருமுறை, தமிழகத்தில் பட்டியல் சமுதாய மக்களுக்கு நீதிமன்றப் பதவிகள் கிடைத்தது திமுக போட்ட பிச்சை என்று பேசினார். இன்று, தமிழகத்தில் மருத்துவர்கள் உருவானது திமுக போட்ட பிச்சை என்று பேசியுள்ளார்.

அதோடு, தமிழகத்தில் இன்று நாய் கூட B.A. பட்டம் வாங்குகிறது என்று, ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தையே அவமானப்படுத்திப் பேசியிருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி. தமிழகத்தில், 1967 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக, இதுவரை வெறும் 5 அரசு மருத்துவக் கல்லூரிகளை மட்டுமே அமைத்துள்ளது என்பதை மறந்த திரு.ஆர்.எஸ்.பாரதி, தமிழகத்தில் மருத்துவர்களை உருவாக்கியதே திமுகதான் என்று போலிப் பெருமை பேசிக் கொள்கிறார்.

திமுக முதல் குடும்பத்தினர் மீதுள்ள வழக்குகளுக்கு வாதாட வேண்டுமானால், டெல்லி, மும்பையிலிருந்து பல மூத்த வழக்கறிஞர்களையும், தமிழக அரசு சார்பான வழக்குகளுக்கு, தமிழகத்தின் மூத்த வழக்கறிஞர்களையும் தேர்ந்தெடுக்கும் கோபாலபுர குடும்பம், திரு.ஆர்.எஸ்.பாரதியை வாதாட அனுப்புவது, கதைக்கு உதவாத வழக்குகளுக்காகத்தான்.

தங்கள் பெற்றோரின் கடின உழைப்பாலும், தங்கள் கடும் முயற்சியாலும் படித்து முன்னேறும் மாணவச் செல்வங்களை அவமானப்படுத்தி, அவர்கள் வளர்ச்சிக்கு திமுகதான் காரணம் என்று கூறிக் கொள்ளும் ஆர்.எஸ்.பாரதி போன்றவர்களைத்தான், திமுக உண்மையில் உருவாக்கியிருக்கிறது.

தமிழக மக்கள் அனைவரையும், பிச்சைக்காரர்கள் என்ற ரீதியில் தொடர்ச்சியாக கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கும் திமுகவின் ஆணவப் போக்கும், திரு.ஆர்.எஸ்.பாரதியின் வாய்த்துடுக்கும் கடும் கண்டனத்துக்குரியது. தமிழக மக்கள் அனைவரும் திமுகவினரை போன்றவர்கள் அல்ல. தமிழக மக்கள் தன்மானம் மிக்கவர்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: R. S. Bharati has insulted the entire student community! - Annamalai allegation
ShareTweetSendShare
Previous Post

இந்திய கிரிக்கெட் வீரர்களை வரவேற்கிறார் பிரதமர் மோடி!

Next Post

போதிய பேருந்து வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி!

Related News

பசுவதை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் சாயப்பட்டறைகள் அமைக்கும் திட்டத்திற்கு அளிக்கவில்லை – மத்திய அரசு அறிவிப்பு!

ஆண்டுக்கு ₹200 கோடி முறைகேட்டை தடுக்க, அரசு கிடங்குகளை டிஜிட்டல் மயமாக்குக – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

டாஸ்மாக் கடைகளில் செயல்படும் பார்களுக்கான அனுமதி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

தீயணைப்புத் துறை டிஜிபியாக வெங்கடராமனை நியமனம் – தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வருகிறது 125 நாள் வேலைத்திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற கப்பல் போக்குவரத்து நடப்பதை உறுதி செய்ய வேண்டும் – பிரதமர் மோடி

நவாஸ்கனி மீதான வழக்கு; வருமான வரித்துறை உறுதி

இந்தியாவுடனான எல்லையை திறப்போம்; பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்

மீண்டும் பற்றி எரியும் வளைகுடா : குவைத், பஹ்ரைனை குறிவைத்த ஈரான் – சிறப்பு கட்’டுரை!

திருப்போரூர் அருகே வைகோ செய்தியாளர் சந்திப்பின் போது வாக்குவாதம் : செய்தியாளரை அடிக்கப்பாய்ந்த மதிமுகவினர்!

பராசக்தி பட சம்பள பாக்கி ரூ.8 கோடியை வழங்க உத்தரவிட வேண்டும் – இயக்குநர் சுதா கொங்குரா வழக்கு!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படாமல் இருந்த 11, 526 கோடி – அரசு கருவூலத்தில் ஒப்படைப்பு?

ஆசிரியர்கள் நியமனத்தில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – ஸ்ரீதர் வேம்பு

அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை – மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை!

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு – கைதானவர்களுக்கு ஆதரவாக ஆஜராகப் போவதில்லை என அயோத்தி வழக்கறிஞர் சங்கம் தீர்மானம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies