ஜாகிர் அம்மாபாளையத்தில் சாயப்பட்டறைகள் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை என்ற தகவலால், 40 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம், ஜாகிர் அம்மாபாளையத்தில் ஜவுளிப் பூங்கா என்ற பெயரில் 60 சாயப்பட்டறைகள் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 40 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இதுதொடர்பாக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, மத்திய உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் அந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.
மேலும், மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து தனியார் நிறுவனம் மூடப்பட்டுள்ளதாக தமிழக அரசும் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
















