மார்ட்டின் தீவு தான் காரணமா? : அமெரிக்கா மீது ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு!
Jul 25, 2026, 03:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மார்ட்டின் தீவு தான் காரணமா? : அமெரிக்கா மீது ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Aug 14, 2024, 07:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேசத்தில் ஆதிக்கம் செலுத்துவது யார் என்பது தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே ஏற்பட்ட போட்டிதான் அந்நாட்டில் ஏற்பட்ட கலவரத்துக்கு காரணம் எனப் புகார் எழுந்துள்ளது. அதுபற்றி விரிவாக பார்க்கலாம்.

தெற்காசியாவின் முக்கிய நாடுகளில் ஒன்றான வங்கதேசத்தில் வன்முறை வெடித்ததால் பதவி விலகிய பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய செய்தி அனைவரும் அறிந்ததே. இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டமே அதற்கு காரணம் என்று சொல்லப்பட்டாலும் பின்னணியில் வேறு பல வில்லங்கங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

தாம் ராஜினாமா செய்தது ஏன் என்பது பற்றி ஷேக் ஹசீனா கூறியதாக சில தகவல்கள் முன்னணி நாளேடுகளில் வெளியாகியுள்ளன. அதன்படி மாணவர்களின் பிணங்கள் மீதேறி ஆட்சியைப் பிடிக்க பயங்கரவாதிகள் முனைந்ததாகவும் அதை தடுக்கவே தாம் பதவி விலகியதாகவும் ஹசீனா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இடஒதுக்கீடு தொடர்பான தமது கருத்து திட்டமிட்டு திரித்து பரப்பப்பட்டதாகவும் அப்பாவி மக்கள் அதை நம்பிவிட்டதாகவும் ஹசீனா வேதனை தெரிவித்துள்ளார். மேலும் தாம் நினைத்திருந்தால் அமெரிக்கா கேட்ட செயின்ட் மார்ட்டின் தீவை கொடுத்துவிட்டு பிரதமராக நீடித்திருக்கலாம் என்றும், ஆனால் தமக்கு அதில் உடன்பாடில்லை என்றும் ஷேக் ஹசீனா கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செயின்ட் மார்ட்டின் தீவில் கப்பல் மற்றும் விமானப்படைத் தளம் அமைக்க விரும்பியது அமெரிக்கா. அதற்காக ராணுவ ரீதியில் இணைந்து செயல்படுவோம் என வங்கதேசத்துக்கு அழைப்பு விடுத்தது. அது மட்டும் நடந்தால் வங்கதேசம் – சீனா இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்துவதோடு, இந்தியா மீதும் ஆதிக்கம் செலுத்த முடியும் என அமெரிக்கா திட்டமிட்டதாக தெரிகிறது. வங்கதேசத்தில் மத ரீதியான பிளவை ஏற்படுத்தி கிறிஸ்தவர்களுக்காக கிழக்கு தைமூர் போன்ற ஓரிடத்தை உருவாக்க அமெரிக்க முயன்றதாகவும் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தத் தகவலை அமெரிக்கா மறுத்தாலும் உண்மை அதுவே என்கிறது ஹசீனாவுக்கு நெருங்கிய வட்டாரம். உலகளவில் தமக்கு போட்டி நாடாக இருக்கும் சீனாவுக்கும் வங்கதேசத்துக்கும் இருக்கும் உறவு அமெரிக்காவுக்கு நன்றாகத் தெரியும். தெற்காசியாவில் பாகிஸ்தானுக்குப் பிறகு வங்கதேசத்தில்தான் அதிகமாக முதலீடு செய்திருக்கிறது சீனா.

வங்கதேசத்தின் ராணுவத் தளவாடங்களில் 86 விழுக்காடு சீனாவிடம் இருந்து வாங்கப்பட்டவை. மேலும் வங்காள விரிகுடாவில் கப்பல்படைத் தளத்தை அமைக்க விரும்பிய சீனா அதன் ஒருபகுதியாக வங்கதேசத்தின் SONADIA தீவில் ஆழ்கடல் துறைமுகத்தை உருவாக்க திட்டமிட்டது. இதே போல் மியான்மரிலும் கால்பதித்து இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்தது சீனா.

ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்த வரை இந்தியா மற்றும் சீனாவுடனான வங்கதேசத்தின் உறவை ஓரளவுக்கு சமமாக வைத்திருந்தார். தற்போது இடைக்கால அரசின் ஆட்சி நடந்து வரும் நிலையில் வங்கதேச தேசியவாத கட்சி மீண்டும் அதிகாரத்துக்கு வந்து கலிதா ஜியா பிரதமரானால் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வாய்ப்புள்ளது.

வங்கதேசத்துக்கும் சீனாவுக்கும் இடையிலான ராணுவ உறவு அதிகரித்தால் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்படும். மேலும் வங்கதேசம் இந்தியாவுக்கு எதிராக திரும்பினால் அது பாகிஸ்தானுக்கு சாதகமாகிவிடும். அப்படி ஒரு சூழல் வந்தால் இந்தியா ஆதரவு நிலைப்பாட்டை அமெரிக்கா எடுக்கலாம். எனவே தற்போதைய சூழலில் வங்காள விரிகுடாவின் புவிசார் அரசியலில் முக்கிய நாடாக மாறியிருக்கிறது வங்கதேசம்.

Tags: Is Martin Island the cause? : Sheikh Hasina accuses America!
ShareTweetSendShare
Previous Post

மோசமான அதிபர் ஜோ பைடன்! போலியான நபர் கமலா ஹாரிஸ்! – டிரம்ப் அதிரடி விமர்சனம்!

Next Post

இல்லந்தோறும் மூவர்ணக் கொடி இயக்கத்தை துணைநிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்!

Related News

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை – சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு!

எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்கும் பாகிஸ்தான் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி அருணாச்சலம் மரணத்திற்கு காரணமாக காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நீர் பங்கீடு விவகாரம் : ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு 70,485 பேர் விண்ணப்பம்!

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம் – ரயில்வே அமைச்சகம்

ஜனநாயக நாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் DEEP STATE : டெல்லி மாணவர் போராட்டத்தின் பின்னணியில் யார்? – சிறப்பு தொகுப்பு!

கேரள ஆர்எஸ்எஸ் நிர்வாகி சீனிவாசன் கொலை வழக்கு – பிஎஃப்ஐ நிர்வாகி முகமது அலி கைது!

டெல்லி போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு மதமாற்ற அமைப்புகள் – அம்பலமான அதிர்ச்சி தகவல்!

சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்ப முயற்சி – டெல்லி காவல்துறை எச்சரிக்கை!

நீண்ட தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ‘குஷா’ ஏவுகணை – முதற்கட்ட சோதனை வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies