சென்னையில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட விவகாரம் - கைதான விக்னேஷுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!
Sep 14, 2026, 04:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட விவகாரம் – கைதான விக்னேஷுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

Murugesan M by Murugesan M
Nov 14, 2024, 09:51 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை கத்தியால் குத்திய வழக்கில், கைதான விக்னேஷுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள கருணாநிதி நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய்த்துறை மருத்துவராக பணியாற்றி வருபவர் பாலாஜி. இவர் நேற்று பணியில் இருந்தபோது அங்கு வந்த இளைஞர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருத்துவர் பாலாஜியை சரமாரியாக குத்தினார். இதில், மருத்துவர் பாலாஜிக்கு கழுத்து, முதுகு உள்ளிட்ட7 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த மருத்துவர் பாலாஜியை மருத்துவமனை ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தாய்க்கு மருத்துவர் பாலாஜி முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்பது தெரியவந்ததால், ஆத்திரத்தில் அவரை கத்தியால் குத்தியதாக கைதான விக்னேஷ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

தொடர்ந்து சைதாப்பேட்டை நீதிமன்ற நடுவர் சுப்பிரமணியன் முன்பு விக்னேஷை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது விக்னேஷுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்ட நிலையில், அவரை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று புழல் சிறையில் அடைத்தனர்.

Tags: 15 days judiciala custodyguindydoctor balaji stabbedKalaignar Centenary Super Speciality Hospitalvignesh arrrested
Share
Tweet
SendShare
Previous Post

ஜார்க்கண்ட் சட்டமன்ற முதல் கட்ட தேர்தல் – 66.48 % வாக்குப்பதிவு!

Next Post

கிண்டி பன்னோக்கு மருத்துவமனை மருத்துவர் மீது தாக்குல் – ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies