தமிழகத்திற்கான நிதி பகிர்வை மத்திய அரசு அதிகரித்துள்ளது - தமிழிசை செளந்தரராஜன் விளக்கம்!
Sep 13, 2026, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்திற்கான நிதி பகிர்வை மத்திய அரசு அதிகரித்துள்ளது – தமிழிசை செளந்தரராஜன் விளக்கம்!

Murugesan M by Murugesan M
Nov 18, 2024, 01:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்நாட்டிற்கான நிதி பகிர்வை மத்திய அரசு அதிகரித்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 88 ஆவது நினைவு தினத்தையொட்டி
சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச்சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள வ.உ.சிதம்பரத்தின் திருவுருவப்படத்திற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னை  செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :

வ.உ.சி அவருக்கு நினைவஞ்சலி செலுத்துவதில் பெருமை கொள்கிறோம்.
இந்திய பொருளாதாரம் மேம்பட வேண்டும் என்று போராடியவர்.
அவர் பெயரில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு 170 கோடி ரூபாயில் மேம்பாட்டு திட்டங்களை பாரத பிரதமர் அறிவித்திருக்கிறார்.

தமிழக வளர்ச்சியில் மத்திய அரசு அக்கறை காட்டுகிறது.  தமிழகத்தை சேர்ந்தவர் என்பதில் நம் மாநிலத்திற்கு நிதி அதிக அளவில் வரவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என அவர் கூறினார்.

அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் பணி புரிவது தவறு என்ற ஒரு சட்டம் தெலுங்கானாவில் உள்ளது அதேபோல் தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிய கூடாது என்ற சட்டத்தை கொண்டு வர வேண்டும் என  அவர்  தெரிவித்தார்.

திருமாவளவனின் மனதில் இருப்பதை புரிந்து கொண்டு அவர் கேட்டதை செய்வோம் என முதலமைச்சர் கூறுகிறாரே தவிர மக்கள் மனதில் என்ன இருக்கு என்பதை புரிந்து கொண்டு அவர் செய்யவதில்லை என அவர் கூறினார்.

நடிகை கஸ்தூரி தவறான கருத்துக்களை தெரிவித்ததற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனாலும் அவரை ஒரு தீவிரவாதி போல் நடவடிக்கை எடுப்பது தவறு எனவும்
நடிகை கஸ்தூரி விஷயத்தில் தமிழக அரசு பாரபட்சமாக செயல்படுவதாகவும் கூறினார்.

தமிழக வளர்ச்சியில் மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது. அதனால்தான் இன்று 16 வது நிதிக்குழு தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்துள்ளது. நிதிக்குழுவிடம் தமிழ்நாட்டின் கோரிக்கைகளை முதல்வர் முன் வைத்துள்ளார்.இதனை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

இதே கோரிக்கையை கடந்த நாட்களுக்கு முன்பாக நிதிக்குழுவை நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக கோரிக்கையை வைத்திருக்க வேண்டும் ஆனால் அதை அவர் நிராகரித்தார். நிதி ஆயோக் போன்ற கூட்டங்களை புறக்கணிக்காமல் தமிழ்நாடு அரசு அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கையை முன் வைக்கிறேன்.

திருமாவளவனின் மனதில் இருப்பதை புரிந்து கொண்டு அதை நிறைவேற்றுவதாக கூரிய முதல்வர், திருமாவளவன் கூட்டத்தைக் கூட்டி அந்த கூட்டத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று வைத்த கோரிக்கையை ஏன் முதல்வர் இன்னும் நிறைவேற்றவில்லை? என்றும் தமிழிசை கேள்வி எழுப்பினார்.

Tags: central governmentTamilisai Soundararajanallocation of funds for Tamil Nadu.
Share
Tweet
SendShare
Previous Post

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா? தவெக மறுப்பு!

Next Post

ஆராய்ச்சி மாணவர்களை சொந்த வேலைகளில் ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை – உயர் கல்வித்துறை எச்சரிக்கை

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies