தொடரும் நிர்வாகிகள் விலகல் : காலியாகும் நாம் தமிழர் கூடாரம் - சிறப்பு கட்டுரை!
Apr 27, 2026, 12:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொடரும் நிர்வாகிகள் விலகல் : காலியாகும் நாம் தமிழர் கூடாரம் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Nov 20, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாம் தமிழர் கட்சியிலிருந்து மாநில, மண்டல, மாவட்ட அளவிலான நிர்வாகிகளில் அடுத்தடுத்த விலகல் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. சீமானின் ஆணவப்போக்கான பேச்சே நிர்வாகிகள் வெளியேற முக்கிய காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உயர்ந்த நாம் தமிழர் கட்சியில், மாநில, மண்டல, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் விலகல் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

கிருஷ்ணகிரி மண்டல பொறுப்பாளார் கரு.பிரபாகரன், திருச்சி மண்டல பொறுப்பாளர் பிரபு, விழுப்புரம் மேற்கு மாவட்டச் செயலாளர் பூபாலன் ஆகியோர் கடந்த அக்டோபர் மாதம் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகினர்.

அதன் தொடர்ச்சியாக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார், விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளார் மணிகண்டனும் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியதாக அறிவித்த நிலையில், மருத்துவ பாசறையின் மாநில நிர்வாகியான இளவஞ்சி மற்றும் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் தங்கதுரையும் விலகியிருப்பது கட்சி நிர்வாகிகள் மத்தியிலேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி சாட்டை துரைமுருகன் திருச்சி காவல்துறையால் கைது செய்யப்பட்டபோது அவருடனான சீமானின் தொலைபேசி உரையாடல் வெளியே கசித்து அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதில் கட்சியின் பெண் நிர்வாகியான காளியம்மாளை தரக்குறைவாக பேசுவது இடம்பெற்றிருந்த நிலையில், அது உண்மை தான் என சீமானே பகிரங்கமாக ஒத்துக் கொண்டது கட்சி நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

கட்சியின் நிர்வாகிகளை கலந்து ஆலோசிக்காமல் முடிவெடுப்பது, சர்வாதிகாரி போல நடந்து கொள்வது, பெண்களுக்கு மரியாதை கொடுக்கத் தவறுவது, ஆணவப்போக்கான பேச்சு என சீமானின் அநாகரீகமான செயல்பாடுகளே கட்சியிலிருந்து நிர்வாகிகள் கொத்து கொத்தாக வெளியேற பிரதானக் காரணம் என கூறப்படுகிறது.

கட்சியில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் போது நிர்வாகிகளின் ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுப்பதும், அதனை கேட்கும் போது கட்சியில் விருப்பம் இருந்தால் இருக்கலாம், இல்லையென்றால் வெளியே போகலாம் என அதிகாரத் தொணியில் பேசுவதையுமே வாடிக்கையாக கொண்டிருக்கும் சீமானின் தலைமையில் தொடர விரும்பவில்லை என கட்சியிலிருந்து வெளியேறிய நிர்வாகிகள் கூறுகின்றனர்.

கட்சி நிர்வாகிகள் தவறு செய்தால் அக்கட்சியின் தலைமை நடவடிக்கை எடுக்கும், ஆனால் கட்சித் தலைமையே தவறு செய்தால் யாரிடம் தீர்வு கேட்பது என்ற மனக்குமுறலோடு ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கியிருப்பதால் நாம் தமிழர் கட்சியின் அடிப்படை கட்டமைப்பு அடியோடு சிதைய தொடங்கியுள்ளது.

சீமானின் எழுச்சியான உரையை நம்பி அவரை தலைமையாக ஏற்றுக் கொண்டு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்த தங்களுக்கு எந்தவித மரியாதையும், அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்பதோடு, ஒரு சிலர் மட்டுமே கட்சியின் முழுமையான செயல்பாடுகளை தீர்மானிப்பதாகவும் கட்சியிலிருந்து வெளியேறும் நிர்வாகிகள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகம் எனும் புதிய கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜயை நாடி நாம் தமிழர் கட்சியை சார்ந்த ஏராளமான நிர்வாகிகள் சென்று கொண்டிருக்கும் நிலையில், சீமானின் அணுகுமுறையில் மாற்றம் இல்லையெனில் நாம் தமிழர் கட்சியின் கூடாரம் முழுமையாக காலியாகும் என எச்சரிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்

Tags: seemanNaam Tamilar Party President SeemanNaam Tamilar katchisatai duraimurugan
ShareTweetSendShare
Previous Post

செங்கல்பட்டு கருநிலம் லஷ்மி நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Next Post

தங்கம் வாங்க…இந்தியாவுக்கு வாங்க – சிறப்பு தொகுப்பு!

Related News

இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; நியூசி. பிரதமர் பெருமிதம்

பைக்குகளை சேதப்படுத்தி பெண்ணை தாக்கிய போதை இளைஞர்கள்; சென்னை எண்ணூரில் துணிகரம்

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் மீது தாக்குதலா ?; போலீசார் விசாரணை

ஏஐ தொழில்நுட்பம் தெரியாமல் இருப்பது கற்காலத்தில் வாழ்வதற்கு இணையானது; ஆனந்த் வெங்கடேஷ்

பெண்களின் பாதுகாப்பில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்து விட்டார்;உள்துறை அமைச்சர் அமித்ஷா

பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் தலையிட முடியாது; சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

Load More

அண்மைச் செய்திகள்

முகவர்கள் இல்லாத நேரத்தில் இவிஎம் பேட்டரி நீக்கமா ?; அதிகாரிகளுடன் வாக்குவாதம்

பாஜகவில் இணைந்த ராகவ் சதா தலைமையிலான எம்.பிக்கள்; காலியான ஆம் ஆத்மி கூடாரம்

முந்தைய தலைவர்கள் எடுக்க தயங்கிய முக்கிய முடிவுகளை பிரதமர் மோடி எடுத்தார்; புகழாரம் சூட்டிய எம்.பி

முதல்கட்ட வாக்குப்பதிவில் மாற்றத்திற்கான அலை; பிரதமர் மோடி

தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் – கே.பி.ராமலிங்கம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் கோலாகலம்!

தமிழக சடட்ப்பேரவை தேர்தல் : 2021ஆம் ஆண்டை விட சுமார் 22 லட்சம் பேர் கூடுதலாக வாக்களிப்பு!

டிசம்பர் மாதத்திற்குள் 85 % எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்!

நற்பண்பு, தன்னம்பிக்கை, சேவை மனப்பான்மை கொண்ட தன்னார்வலர்களை உருவாக்குவதே ஆர்எஸ்எஸின் நோக்கம் – தத்தாத்ரேய ஹோசபலே

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies