மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக - பாஜக குற்றச்சாட்டு!
Jan 24, 2026, 05:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக – பாஜக குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Dec 10, 2024, 10:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் குலத்தொழிலை ஊக்குவிப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்த திமுக அரசு, தற்போது அதே திட்டத்தை கருணாநிதி பெயரில் கொண்டுவந்துள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது.

மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தால் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது என மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

இந்த நிலையில், மத்திய அரசின் திட்டத்தை கருணாநிதி கைவினை திட்டம் என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை விமர்சித்துள்ள பாஜக, மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், சமூக நீதிக்கு தாங்கள்தான் பொறுப்பாளர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் திமுக சுயநலத்துடன் செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

தமிழக அரசின் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் கரு.நாகராஜன், விஸ்வகர்மா திட்டத்தை புரிந்துகொள்ளாதது போல் திமுக அரசு நடிக்கிறது என குற்றம் சாட்டினார்.

அதேபோல், விஸ்வகர்மா திட்டமும், கருணாநிதி கைவினை திட்டமும் ஒன்றுதான் என குறிப்பிட்ட அவர், வழக்கமாக அனைத்து திட்டங்களுக்கும் ஸ்டிக்கர் ஒட்டுவது போல் விஸ்வகர்மா திட்டத்துக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளதாக விமர்சித்தார்.

அதேபோல் திமுக அரசின் செயலுக்கு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார். 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே கருணாநிதி கைவினை திட்டத்தில் சேரமுடியும் என திமுக அரசு அறிவித்துள்ள நிலையில், இளைஞர்களுக்கான வாய்ப்பை தமிழக அரசு மறுப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் கைவினை கலைஞர்கள் பயன்பெறக்கூடாது என்ற உள்நோக்கத்துடன் திமுக அரசு செயல்படுகிறது என குற்றம்சாட்டிய அவர், எல்லாவற்றுக்கும் அண்ணா மற்றும் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும் என்பதே இவர்களது திட்டம் என விமர்சித்தார்.

Tags: central governmentTamilisai SoundararajanDMK governmentNarayanan TirupatiPrime Minister's Vishwakarma schemeKarunanidhi Craft Scheme
ShareTweetSendShare
Previous Post

‘பிரகதி’ வலைதளம் மூலம் உள்கட்டமைப்பு திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன – அண்ணாமலை

Next Post

எப்போது வருகிறது DMK files – 3 : சஸ்பென்ஸ் உடைத்த அண்ணாமலை!

Related News

வெயிலில் கருகிய நெற்பயிர்கள் -காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்!

பெண்ணை சிங்கப்பூருக்கு அழைத்து சென்று கிட்னி திருட்டு – நாமக்கலில் மீண்டும் பரபரப்பு

மதுரை முனியாண்டி சுவாமி கோயிலில் பிரியாணி திருவிழா!

“மத்திய அரசின் பல்வேறு கடன் உதவிக்காக ரூ.9,270 கோடி விடுவிப்பு”

கந்துவட்டி பிரச்னை – எண்ணெய் விற்பனை கடையை சூறையாடிய நபர்கள்!

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களை நேர்காணல் செய்த இபிஎஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு அட்டவனை வெளியீடு!

வந்தே பாரத் ஸ்லீப்பரில் செல்லப் பிராணியை கொண்டு செல்ல கூண்டு – குவியும் பாராட்டு!

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிய பட்டிமன்ற பேச்சாளர்!

சிறையில் காதல் வயப்பட்ட ஆயுள் தண்டனை கைதிகள் – திருமணம் செய்து கொள்ள 15 நாட்கள் பரோல்!

கிழக்கு ஆப்பிரிக்காவில் விலகி செல்லும் டெக்டோனிக் தட்டுகள் -புதிய பெருங்கடல் உருவாக வாய்ப்பு!

ஈரானை நோக்கி மிகப்பெரிய கடற்படை செல்கிறது – பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி அதற்கு, இதுவே சாட்சி” – அண்ணாமலை கடும் விமர்சனம

இரவோடு இரவாக திருடப்பட்ட 60 அடி நீள இரும்பு பாலம்!

உரிமையாளருக்காக தகன மேடையில் காத்திருந்த நாய்! – கண் கலங்கவைத்த சம்பவம்!

பாரதம் ஒன்றாக இருக்க சர்தார் வல்லபாய் படேல்தான் காரணம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies