200 இடங்களை கைப்பற்றுவோம் என்பது முதல்வரின் பகல் கனவு - தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!
Sep 13, 2026, 01:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

200 இடங்களை கைப்பற்றுவோம் என்பது முதல்வரின் பகல் கனவு – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

Murugesan M by Murugesan M
Dec 25, 2024, 12:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2026 தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்குமா என்பது தெரியாது என்றும், 200 இடங்களை கைப்பற்றுவோம் என்ற ஸ்டாலினின் கனவு பகல் கனவாகதான் போகும் எனவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களது நூறாவது பிறந்தநாளையொட்டி பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு முன்பாக உள்ள கொடி கம்பத்தில் பாஜக கொடியை ஏற்றினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள். வாஜ்பாய் அவர்களது 65 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 56 ஆண்டுகாலம் எதிர் அணியில் இருந்து அரசியல் செய்திருக்கிறார். ஆரோக்கியமான அரசியலுக்கு வித்திட்டவர். குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மிகுந்த ஆதரவை கொடுத்துக் கொண்டிருந்தார். முரசொலி மாறன் மறைவின்போது நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தியவர். ஒரு ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்த சென்றவர். பிரதமர் அவர்கள் அவர் வழியில் நல்லாட்சி செய்து கொண்டிருக்கிறார்.

ஒரு தொண்டனாக தன்னுடைய கருத்துக்களை எப்போதும் பதிவு செய்பவர். நல்லாட்சி என்றாலே வாஜ்பாய் என்றுதான் பதிவு செய்து இருக்கிறார்கள். அவரது நூறாவது பிறந்தநாளை ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் பாஜக கொடியேற்ற வேண்டும் எனவும் வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என எங்களது பூத்தை சார்ந்த நண்பர்களோடு இந்த நிகழ்ச்சியை கொண்டாடினோம். தொடர்ந்து அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்று கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.

வாஜ்பாய் ஆட்சி, மோடியின் ஆட்சியும் தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பது தான் எங்களது சபதமாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் திருமாவளவன் இருப்பாரா, கம்யூனிஸ்ட் கட்சியினர் இருப்பார்களா, வேல்முருகன் இருப்பார்களா என தெரியாது. ஆனால் 200, 200 என அண்ணன் ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருப்பது கனவாக தான் போகும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

Tags: Saligramam.DMKstalinSenior BJP leader Tamilisai Soundararajandmk allianceformer prime minister vajpayee
Share
Tweet
SendShare
Previous Post

அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவட்டும் – கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அண்ணாமலை வாழ்த்து!

Next Post

தொடர் விடுமுறை – தஞ்சை பெரிய கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies