200 இடங்களை கைப்பற்றுவோம் என்பது முதல்வரின் பகல் கனவு - தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!
Jun 14, 2026, 06:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

200 இடங்களை கைப்பற்றுவோம் என்பது முதல்வரின் பகல் கனவு – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

Murugesan M by Murugesan M
Dec 25, 2024, 12:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2026 தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்குமா என்பது தெரியாது என்றும், 200 இடங்களை கைப்பற்றுவோம் என்ற ஸ்டாலினின் கனவு பகல் கனவாகதான் போகும் எனவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களது நூறாவது பிறந்தநாளையொட்டி பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு முன்பாக உள்ள கொடி கம்பத்தில் பாஜக கொடியை ஏற்றினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள். வாஜ்பாய் அவர்களது 65 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 56 ஆண்டுகாலம் எதிர் அணியில் இருந்து அரசியல் செய்திருக்கிறார். ஆரோக்கியமான அரசியலுக்கு வித்திட்டவர். குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மிகுந்த ஆதரவை கொடுத்துக் கொண்டிருந்தார். முரசொலி மாறன் மறைவின்போது நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தியவர். ஒரு ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்த சென்றவர். பிரதமர் அவர்கள் அவர் வழியில் நல்லாட்சி செய்து கொண்டிருக்கிறார்.

ஒரு தொண்டனாக தன்னுடைய கருத்துக்களை எப்போதும் பதிவு செய்பவர். நல்லாட்சி என்றாலே வாஜ்பாய் என்றுதான் பதிவு செய்து இருக்கிறார்கள். அவரது நூறாவது பிறந்தநாளை ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் பாஜக கொடியேற்ற வேண்டும் எனவும் வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என எங்களது பூத்தை சார்ந்த நண்பர்களோடு இந்த நிகழ்ச்சியை கொண்டாடினோம். தொடர்ந்து அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்று கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.

வாஜ்பாய் ஆட்சி, மோடியின் ஆட்சியும் தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பது தான் எங்களது சபதமாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் திருமாவளவன் இருப்பாரா, கம்யூனிஸ்ட் கட்சியினர் இருப்பார்களா, வேல்முருகன் இருப்பார்களா என தெரியாது. ஆனால் 200, 200 என அண்ணன் ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருப்பது கனவாக தான் போகும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

Tags: Saligramam.DMKstalinSenior BJP leader Tamilisai Soundararajandmk allianceformer prime minister vajpayee
ShareTweetSendShare
Previous Post

அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவட்டும் – கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அண்ணாமலை வாழ்த்து!

Next Post

தொடர் விடுமுறை – தஞ்சை பெரிய கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

Related News

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies