மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனை அடுத்து மன்மோகன் சிங் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மன்மோகன் சிங்கின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், பிரதமர் மோடி நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதனை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், மன்மோகன் சிங் குடும்பத்தினருக்கு அவர் ஆளுதல் கூறினார். இதனை அடுத்து, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.