பேஜர் வெடிகுண்டு பாணி : இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ரகசிய திட்டம்? - சிறப்பு கட்டுரை!
Sep 20, 2026, 05:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேஜர் வெடிகுண்டு பாணி : இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ரகசிய திட்டம்? – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Dec 27, 2024, 09:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா மீது மிகப்பெரிய தீவிர வாதத் தாக்குதலை நடத்த பாகிஸ்தானின் ( ISI ) ஐஎஸ்ஐ உளவு அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தும் வகையில், இஸ்ரேல் பேஜர் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தியது போல் பாகிஸ்தானும் புதுவகையில் தாக்குதல் நடத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்தியாவும், பாகிஸ்தானும் அதிக எண்ணிக்கையில் ராணுவ ஆளில்லா விமானங்களின் (ட்ரோன்) இருப்பை தங்கள் படையில் அதிகரித்து வருகின்றன.

இரு நாடுகளும் வெளிநாடுகளில் இருந்து ஆளில்லா விமானங்களை வாங்கியுள்ளன. கூடவே எதிரியை கண்காணிப்பது, உளவு பார்ப்பது மற்றும் இலக்குகளை குறிவைத்து தாக்குவது போன்ற திறன்கள் அடங்கிய (ட்ரோன்) தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே உருவாக்கியும் உள்ளன.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா ஆசியாவின் மூன்று அணுசக்தி கொண்ட நாடுகளாகும். மூன்று நாடுகளும் தங்கள் ராணுவத் திறனை வேக வேகமாக மேம்படுத்தி வருகின்றன. குறிப்பாக ட்ரோன்களைத் தயாரிப்பதில் மூன்று நாடுகளும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டி போடுகின்றன.

ராணுவத்தில் பெரிய அளவில் ட்ரோன்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், போர் முறை மாறியுள்ளது. ஏதேனும், மோதல் ஏற்பட்டால், ட்ரோன்களின் பயன்பாடு மிக அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது

பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் இந்திய பகுதிக்குள் ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் இருந்து செயல்படும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், இஸ்ரேலின் “பேஜர் வெடிகுண்டு” சதித்திட்டத்தைப் போலவே, இந்தியாவிலும் தீவிரவாத தாக்குதல்களை நடத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ISI நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய உள்துறை தகவல்கள் கிடைத்துள்ளன.

இதற்காக, சீனாவில், உயர் தொழில்நுட்ப, துல்லியமான ஆயுதங்களை வழங்கும் திறன் கொண்ட ஒரு நெட்வோர்க்கை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது. மேலும், ட்ரோன் உதிரிபாக தயாரிப்பாளர்களைத் தெற்காசியாவில் தேட தொடங்கியுள்ளது.

இந்தியாவின் முக்கியமான அரசு, ராணுவம் மற்றும் பொருளாதார வணிக மையங்களைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்களை நடத்த பாகிஸ்தானின் ISI தொடர்புடைய உளவு அமைப்புகள் திட்டமிட்டுளளதாக இந்திய உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் முக்கிய இராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களைக் குறிவைத்திருக்கிறார்கள் என்றும் கூறப் படுகிறது.

இதற்கு பதிலடியாக, இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு முகமைகள் முக்கியமான உள்கட்டமைப்புகளைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கின்றன. மேலும், இந்திய உளவுத்துறை ட்ரோன் உதிரிபாக விநியோகஸ்தர்கள் மற்றும் ட்ரோன் உற்பத்தியாளர்கள் மீதும் கண்காணிப்பை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இந்தியா தயாராகி வருவதால், சுற்றுலா மையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் கும்பமேளா நடைபெறும் இடங்களும், ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் மிக வலிமையானது என்பதால், பாகிஸ்தானின் தீவிரவாத சதி திட்டங்கள் முன்பு போல் எடுபடாது என்றே ராணுவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: isimajor terrorist attackmilitary dronesmilitary capabilities.IndiaPakistan's (ISI)pager bomi
Share
Tweet
SendShare
Previous Post

காசா அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல் – பத்திரிகையாளர்கள் 5 பேர் உயிரிழப்பு!

Next Post

ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் : பாகிஸ்தானுடன் சண்டைக்கு தயாராகும் தாலிபான் – சிறப்பு கட்டுரை!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies