ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது.
ராக்கெட்-ஐ விண்ணில் ஏவுவதற்கான 25 மணி நேர கவுண்டவுன் நேற்றிரவு தொடங்கிய நிலையில், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இன்று இரவு 9.58 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
இந்திய ஆய்வு மையத்தை 2035ம் ஆண்டுக்குள் விண்ணில் நிறுவ திட்டமிட்டுள்ள இஸ்ரோ, இதற்காக 400 கிலோ எடை கொண்ட 2 விண்கலன்களை பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் செலுத்துவதாக தெரிவித்துள்ளது.
மேலும், இந்த ராக்கெட்டின் 4ம் நிலையில் 24 ஆய்வுக் கருவிகள் இடம்பெற்றுள்ளதாகவும் இஸ்ரோ கூறியுள்ளது.