ஒரு செல்ஃபிக்கு ரூ.100 கட்டணம் : சம்பாதிக்க புது ஐடியா கண்டுபிடித்த ரஷ்ய பெண் - சிறப்பு கட்டுரை!
Apr 19, 2026, 10:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரு செல்ஃபிக்கு ரூ.100 கட்டணம் : சம்பாதிக்க புது ஐடியா கண்டுபிடித்த ரஷ்ய பெண் – சிறப்பு கட்டுரை!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 21, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யாவைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் தன்னுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள வரும் உள்ளூர் வாசிகளிடம், கட்டணமாக 100 ரூபாய் வசூலிப்பதாகக் கூறி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்…

இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களுடன் பேசி பழகும் ஆர்வத்தில் உள்ளூர் வாசிகள் பலர், புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக்கொள்ளலாமா எனக்கேட்டு அவர்களை அணுகுவதை நாம் பல சுற்றுலா தலங்களில் பார்த்திருக்க வாய்ப்புண்டு.

இதுபோன்ற அணுகுமுறைகள் சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர்களுக்கு தொடக்கத்தில் ஒருவித மகிழ்ச்சியை கொடுத்தாலும், அதுவே நாளடைவில் அவர்களுக்கு பெரும் தொல்லையாக மாறிவிடுகிறது. அமைதியான முறையில் தங்கள் நேரத்தை செலவிட விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு இது ஒருவித சோர்வை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், வெளிநாட்டவர்கள் எதிர்கொள்ளும் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஒன்றை கண்டுபிடித்துள்ள ஏஞ்சலினா என்ற ரஷ்ய பெண், அதுகுறித்த வீடியோ ஒன்றையும் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

தற்போது கோவாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஏஞ்சலினா, தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில் உள்ளூர் வாசிகளின் வழக்கமான செல்ஃபி கோரிக்கைகள் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து தனது கைப்பையில் இருந்து “ONE SELFIE 100 RUPEES” என எழுதப்பட்டிருந்த காகிதத்தை எடுத்து அனைவரிடமும் காட்டும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இப்படி செய்வதன் மூலம் செல்ஃபி கோரிக்கைகளுடன் தன்னை அணுகும் உள்ளூர் வாசிகளின் தொல்லை தீரும் எனக்கருதிய ஏஞ்சலினாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் காட்டிய காகிதத்தை பார்த்த பின்பு அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள ஆண்கள் பலர் வரிசைகட்டி நின்றதே அதற்கு காரணம்.

புன்னகையுடன் ஏஞ்சலினாவை அணுகிய அவர்கள், 100 ரூபாயை அவரிடம் கொடுத்துவிட்டு அருகே நின்று செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்துச் சென்றனர். இந்நிலையில், தனது புத்தி கூர்மையால் உள்ளூர் வாசிகளிடம் இருந்து சம்பாதித்த 100 ரூபாய் நோட்டை பெருமையுடன் காண்பித்து ஏஞ்சலினா மகிழ்ச்சியடைந்த இந்த வீடியோ சமூக வலைதளத்தில் சுமார் 3 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.

தனது பதிவில் “இந்தியர்கள் வெளிநாட்டவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள பணம் செலுத்துகின்றனர். இதனால் செல்ஃபிக்கு போஸ் கொடுக்க வெளிநாட்டவர்கள் சோர்வடையவேண்டிய அவசியம் இல்லை. இனி அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கலாம். இந்த தீர்வு எப்படியிருக்கு?” எனவும் ஏஞ்சலினா குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு வைரலாகியுள்ள நிலையில், ஏஞ்சலினாவின் சிந்தனைமிக்க செயலை பலரும் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.

Tags: ONE SELFIE 100 RUPEESஒரு செல்ஃபிக்கு ரூ.100 கட்டணம்Russian touristRs 100 for taking selfiesAngelinaAngelina selfies
ShareTweetSendShare
Previous Post

மண்டல – மகர விளக்கு பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் வருவாய் ரூ. 440 கோடி!

Next Post

சித்தா, யுனானி, ஆயுர்வேதா உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!

Related News

மதமாற்றம், லவ் ஜிகாத்திற்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை – குடியரசு தலைவருக்கு விஷ்வ இந்து பரிஷத் தகவல்!

ராகுல் காந்தியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்த செல்வப்பெருந்தகை – ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள்!

தமிழகம் வந்தார் ராஜ்நாத்சிங் – வாசுதேவநல்லூர் தொகுதியில் இன்று ரோடு ஷோ!

தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கின்ற தேர்தல் – இபிஎஸ்

என்டிஏ ஆட்சி அமைந்ததும் ஊழல் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஊழல் மலிந்த திமுக அரசை வீழ்த்தி என்டிஏ ஆட்சி அமைக்கும் – பியூஷ் கோயல் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி – எதிர்கட்சிகளை கண்டித்து ஆந்திராவில் முதல்வர் தலைமையில் பேரணி!

பொன்னேரியில் இண்டி கூட்டணி பிச்சார கூட்டம் – ராகுல் காந்தி பேசிக்கொண்டிருந்த போது கலைந்து சென்ற பொதுமக்கள்!

தென்னாப்பிரிக்காவிலிருந்து பெங்களூரு வந்த சிறுத்தைகள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது – கிரண் ரிஜிஜூ

பிரதமர் மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்!

உதகையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை!

குறிஞ்சிப்பாடி அருகே அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பிரச்சாரம் – இளைஞர்கள் வாக்குவாதம்!

திமுகவுக்கு எதிராக பேச்சு – பிரேமலதா மீது ஸ்டாலின் அதிருப்தி என தகவல்!

மகளிர் இடஒதுக்கீடூ மசோதா விவகாரம் நாடு தழுவிய போராட்டம் நடத்த என்டிஏ திட்டம்!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து, கஞ்சா புழக்கம் அதிகரித்துவிட்டது – இசக்கி சுப்பையா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies