அனைத்துக்கட்சி கூட்டம் - பாஜக, நாதக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பு!
Apr 29, 2026, 11:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அனைத்துக்கட்சி கூட்டம் – பாஜக, நாதக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 5, 2025, 11:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசு அழைப்பு விடுத்த அனைத்துக்கட்சி கூட்டத்தை பாஜக, நாதக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில் 60 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தொகுதி மறுசீரமைப்பு குறித்து முக்கிய முடிவு எடுப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் பாஜக, நாதக, தமாகா ஆகிய கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் ஜெயக்குமார், இன்பதுரை, காங்கிரஸ் கட்சி சார்பில் செல்வப்பெருந்தகை, பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருமாவளவன் பங்கேற்றனர்.

மேலும், மதிமுக சார்பில் வைகோ, மக்கள் நீதி மையம் சார்பில் கமல்ஹாசன் கூட்டத்தில் பங்கேற்றனர்.

சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோரும் அனைத்திக்கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு வருகை தந்த அனைத்து தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இந்த நிலையில் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்புக்கு அனைத்து கட்சி கூட்டம் ஒருமனதாக எதிர்ப்பு தெரிவிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1971ம் ஆண்டு முறையை 30 ஆண்டுகளுக்கு நீட்டித்து அதனை நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவிக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

தென்மாநில எம்.பி.க்கள் கொண்ட கூட்டு நடவடிக்கை குழு அமைக்கவும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

Tags: tamil nadu governmentndaNaam Tamilar katchibjp boycottChennaibjpMK StalinAll party meeting
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் பெல்ஜியம் இளவரசி – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

Next Post

உதகை உள்ளிட்ட மலை வாசஸ்தலங்களுக்கு மின்சார பேருந்துகள் – உயர் நீதிமன்றம் ஆலோசனை!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies