மதுரவாயல் தனியார் கல்லூரியின் அலட்சியம் - மாணவரகள் எதிர்காலம் கேள்விக்குறி!
Jun 22, 2026, 08:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரவாயல் தனியார் கல்லூரியின் அலட்சியம் – மாணவரகள் எதிர்காலம் கேள்விக்குறி!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 21, 2025, 08:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மதுரவாயலில் தனியார் கல்லூரியின் அலட்சியத்தால் மூன்று மாணவ மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

சென்னை மதுரவாயல் அடுத்த அடையாளம் பட்டு பகுதியில்  சுவாமி விவேகானந்தா என்ற பெயரில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரியில் கடந்த 2020-2023 ஆம்  ஆண்டில் B.Sc(Viscom) பிரிவில் கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ஸ்வேதா கோவூர் பகுதியைச் சேர்ந்த வருண் பாண்டியன் போரூர் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர் என மொத்தம் மூன்று பேர் மட்டுமே படித்து வந்திருக்கின்றனர்.

இவர்களிடம் ஆண்டுக்கு ஒரு லட்சம் விதம் 3 லட்சம் கட்டணமாக வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்கள் படித்து முடித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும்  முழு மதிப்பு சான்றிதழ் வழங்காமல் கல்லூரி நிர்வாகம் காலம் தாழ்த்தி   ஏமாற்றி வந்துள்ளது.

இந்த நிலையில்  ஸ்வேதா என்ற மாணவி  விவேகானந்தா கல்லூரியில் கொடுக்கப்பட்ட ஐந்து செமஸ்டர் மார்க் சீட்டை வைத்து கடந்த 2024 ஆம் ஆண்டு சட்டக் கல்லூரியில் சேர்ந்து ஒன்றரை ஆண்டுகளாக பயின்று வந்துள்ளார். மேலும் இரண்டு மாணவர்களும் கல்லூரி சேர முடியாமல் வேலை பார்த்து வந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் மாணவி பயின்று வரும் கல்லூரியில் முழு மதிப்பு சான்றிதழை ஒரு ஆண்டுகளாக கேட்டு வந்துள்ளனர். இதனையடுத்து இவர்கள் நேரடியாக மெட்ராஸ் யூனிவர்சிட்டிக்கு சென்று சான்றிதழ் குறித்து கேட்டபோது அவர்கள் என் எம் இ என்ற தேர்வு ஒன்று எழுதாமல் விடுபட்டு இருப்பதாகவும்  அதனை எழுதினால் தான் சான்றிதழ் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.

அதற்கான ஆன்லைன் விண்ணப்பிக்கும் காலமும் முடிந்து விட்டது என்றும் இன்னும் ஒரு சில நாட்களில் தேர்வு எழுத வேண்டும் என தெரிவித்து இருக்கின்றனர்.  இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவ மாணவிகளின் பெற்றோர் இதுகுறித்து  கல்லூரியில் சென்று கேட்டபோது அலட்சியமாக தேர்வு ஒன்று உள்ளதாகவும், அதனை எழுதினால் முழு மதிப்பு சான்றிதழ் கிடைக்கும் எனறும் விரைந்து தேர்வு எழுத தயாராகும்படி கூறியுள்ளனர்.

மேலும் NME என்ற தேர்வு ஒன்று இருப்பது கல்லூரி நிர்வாகத்திற்கு தெரியாததும், அந்த தேர்வு தொடர்பாக இதுவரை ஹால் டிக்கெட் கூட ஏதும் கொடுக்காமல் தற்போது அதற்கான தேர்வை எழுத கூறியதால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் மாணவ மாணவிகள் கல்லூரியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இது குறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் கல்லூரியில் விசாரணை நடத்தி வருகின்றனர்..

Tags: ChennaiMaduravoyalSwami Vivekananda colleageB.Sc (Viscom)
ShareTweetSendShare
Previous Post

மழையால் பாதிக்கப்பட்ட உப்பளங்கள் – சீரமைப்பு பணி தீவிரம்!

Next Post

சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி மறுத்த உத்தரவு – உச்ச நீதிமன்றத்தில் பாரத் இந்து முன்னணி அமைப்பு மேல் முறையீடு!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies