தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Aug 8, 2026, 03:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Apr 8, 2025, 11:28 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பதவி நீக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் உசிலம்பட்டி நகராட்சி தலைவர் தாக்கல் செய்த வழக்கில், ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் பதிலளிக்கத் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகக்கூறி சென்னை  மாநகராட்சியின் 189ஆவது வார்டு கவுன்சிலர் பாபு, 5ஆவது வார்டு கவுன்சிலர் கே.பி.சொக்கலிங்கம்,  தாம்பரம் மாநகராட்சி 40ஆவது வார்டு கவுன்சிலர் ஜெயபிரதீப், உசிலம்பட்டி நகராட்சி தலைவரும் 11ஆவது வார்டு கவுன்சிலருமான சகுந்தலா ஆகியோரை பதவி நீக்கம் செய்து நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கடந்த மார்ச் 27ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதி சத்தியநாராயண பிரசாத் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது,  முழுமையான விசாரணை நடத்தாமல் பதவி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உரிய விளக்கம் அளித்து கவுன்சிலர்கள் அளித்த பதிலின் அடிப்படையில் அரசு முடிவெடுக்க வேண்டுமென தெரிவித்தார். மேலும், கவுன்சிலர்களின் பதிலை ஆணையருக்கு அனுப்பியது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

இதுதொடர்பாக ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் விரிவான பதிலை ஆவணங்களுடன் தாக்கல் செய்வதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உசிலம்பட்டி நகராட்சி தலைவர் தரப்பில், முதலில் நகராட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்வது தொடர்பாகக் குறிப்பிட்ட அரசு, அந்த உத்தரவில் கவுன்சிலர் பதவியையும் சேர்த்துள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியதால் 21ஆம் தேதிக்குள் பதிலளிப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை ஏப்ரல் 21ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: சென்னை உயர்நீதிமன்றம்தமிழக அரசுMadras High Court orders Tamil Nadu government!
Share
Tweet
SendShare
Previous Post

விமான நிலையங்களில் போதை பொருள் கண்டறிய மோப்ப நாய்!

Next Post

அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.79 கோடி!

Related News

ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து சரிவு – அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி!

சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பில் உயிரிழந்த தேச பக்தர்களுக்கு வீர வணக்கம் – நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாதவர்களே அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை – மாணிக்கம் தாகூர்

UPI கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் – நயினார் நாகேந்திரன்!

மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு – சட்டசபையில் மசோதா தாக்கல்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜந்தர்- மந்தர் போராட்ட களத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

UPI பண பரிவர்த்தனை சேவை தொடர்ந்து இலவசம் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம்!

கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தக்கூடாது – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு!

ஆடி வெள்ளி – தங்கத் தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் முப்பெரும் தேவியர்!

இன்று திருவண்ணாமலை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டம் – திமுக புறக்கணிப்பு!

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies