அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
Jun 24, 2026, 06:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
May 27, 2025, 05:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசு ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரியும் அனைவருக்கும் முறையான பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், தமிழக அரசு சார்பில் தங்களுக்கு முறையான மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டுமென கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சி செய்திகள் வெளியாகியுள்ளன.

அம்மோனியா, சல்ஃபூரிக் அமிலம் போன்ற அபாயகரமான இரசாயனங்களைக் கையாளும் ரப்பர் தொழிலாளர்களுக்கு போதுமான அடிப்படை மருத்துவ வசதிகளை செய்து தராதது மட்டுமன்றி, தங்கள் உரிமைகளுக்காக மாதக்கணக்கில் போராடுபவர்களை இன்று வரை கண்டு கொள்ளாமல் காலம் தாழ்த்தி வரும் திமுக அரசின் அலட்சியப் போக்கு ஏற்புடையதல்ல.

குறிப்பாக, அத்தொழிற்சாலையில் இயங்கிவந்த மருத்துவமனை தற்போது பகுதிநேர ஆரம்ப சுகாதார மையமாக தரமிறக்கப்பட்டுள்ளதாகவும், ஒரே ஒரு மருத்துவர் அதுவும் வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே அங்கே பணிக்கு வருகிறார் எனவும், அரசு நிறுவனத்தில் பணிபுரியும் தங்களின் மருத்துவக் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன எனவும் குமுறும் அத்தொழிலாளர்களின் பரிதாப நிலை நம்மைக் கவலையடையச் செய்கிறது.

எனவே, தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு அம்மக்களின் நீண்ட கால கோரிக்கையான ஊழியர் மாநிலக் காப்பீட்டின் (ESIC) கீழ் அவர்களைப் பதிவு செய்வதோடு, அரசு ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரியும் அனைவருக்கும் முறையான பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: DMKThe government should provide protective gear to rubber workers: Nayinar Nagendran urges the governmentஅரசு ரப்பர் தொழிலாளர்mk staliin
ShareTweetSendShare
Previous Post

சீக்கியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கிய டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா!

Next Post

பஹல்காம் மக்களின் மகிழ்ச்சி, வளர்ச்சி ஒருபோதும் நின்றுவிடாது : ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies