காவலர்கள் எப்போதும் கவனமாகவும், சிறப்பாகவும் பணியாற்ற வேண்டும் : தமிழக குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவு ஐஜி அன்பு!
Sep 6, 2026, 06:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காவலர்கள் எப்போதும் கவனமாகவும், சிறப்பாகவும் பணியாற்ற வேண்டும் : தமிழக குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவு ஐஜி அன்பு!

Murugesan M by Murugesan M
Jul 9, 2025, 03:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சமூகத்தின் பார்வை காவல்துறையினர் மீது உள்ளதால் காவலர்கள் எப்போதும் கவனமாகவும், சிறப்பாகவும் பணியாற்ற வேண்டும் எனத் தமிழக குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவு ஐஜி அன்பு வலியுறுத்தியுள்ளார்.

வேலூர் கோட்டையில் உள்ள 129 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் பழமையான காவலர் பயிற்சி பள்ளியில் கடந்த ஏழு மாதங்களாகப் பயிற்சி பெற்ற 182 ஆயுதப்படை இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

கோட்டை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை ஐஜி அன்பு, காவலர்களின் அணிவகுப்பைத் திறந்த வாகனத்தில் சென்று ஏற்றுக்கொண்டார்.

அப்போது, பெண் காவலர்களின் சிலம்பம், வாள் வீச்சு மற்றும் கண்களைக் கட்டிக்கொண்டு துப்பாக்கி பாகத்தைக் கழற்றி போற்றுதல், ஒருவரின் மீது வைக்கப்பட்ட காய்கறிகளை வெட்டுதல் உள்ளிட்ட சாகசங்களைக் கண்டு ரசித்தார்.

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவு ஐஜி அன்பு, வீட்டில் கரப்பான் பூச்சியைப் பார்த்துப் பயந்த நமது பெண் பிள்ளைகள், துப்பாக்கியைப் பிடித்து பயிற்சி பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது எனத் தெரிவித்தார்.

22 பேருடன் ஆரம்பித்த பெண்கள் காவல் படையில், தற்போது 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருவதாகக் கூறினார். காவலர்கள் எவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்பதை நாள்தோறும் செய்திகளில் பார்ப்பதாகக் கூறிய அவர், காவல்துறையினருக்குக் கனிவு இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்களின் உற்ற நண்பனாக காவல்துறை இருக்க வேண்டும் என ஐஜி அன்பு கேட்டுக் கொண்டார்.

Tags: Police officers should always work carefully and efficiently: Tamil Nadu Crime Branch Criminal Investigation Division IG Anbuஐஜி அன்பு
Share
Tweet
SendShare
Previous Post

ஸ்பெயினில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீ!

Next Post

ராணிப்பேட்டை : திமுக நகர மன்ற தலைவர் சட்டவிரோதமாக கட்டிய விடுதி இடித்து அகற்றம்!

Related News

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

Load More

அண்மைச் செய்திகள்

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies