ஜம்மு-காஷ்மீரில் வெளுத்து வாங்கும் கனமழை : நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழப்பு!
Jul 23, 2026, 12:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஜம்மு-காஷ்மீரில் வெளுத்து வாங்கும் கனமழை : நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழப்பு!

Murugesan M by Murugesan M
Aug 28, 2025, 02:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஸ்ரீநகர், அனந்தநாக். ராம்பன் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஜம்முவில் 380 மில்லி மீட்டர் மழைப் பதிவாகி உள்ளதாகவும் மேலும் 3 நாட்களுக்கு மழைத் தொடரும் எனவும் அம்மாநில வானிலை மையம் தெரிவித்துள்ளது. 1910ம் ஆண்டுக்குப்பின் ஜம்முவில் 24 மணிநேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு இதுவாகும்.

அனந்தநாக் மாவட்டத்தில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தன. வெள்ளத்தில் சிக்கியவர்களைத் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் இணைந்து படகுகள் மூலம் பத்திரமாக மீட்டனர்.

இதேபோல் ராம்பன் மாவட்டத்தில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுப் பல்வேறு இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

முன்னெச்சரிக்கையாகப் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தோடா மாவட்டம் பதேர்வா பகுதியில் கனமழையால் வீடுகள் மற்றும் கோயில்கள் சேதமடைந்தன. அங்கு உள்ள ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் தற்காலிகப் பாலத்தை அமைத்துக் கடந்து சென்றனர்.

ஜம்மு-காஷ்மீரின் தாவி நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் . பெலிச்சரனா பகுதியில் 35 வீடுகள் மற்றும் 6 கடைகள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.

மேலும் தாவி நதியில் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அப்போது, அவ்வழியாக வந்த காரும் நீரில் அடித்து செல்லப்பட்டது.

Tags: நிலச்சரிவுHeavy rains lashed Jammu and Kashmir: Many killed in landslides and floodsவெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழப்புஜம்மு-காஷ்மீரில் கனமழை
ShareTweetSendShare
Previous Post

காமன்வெல்த் 2030 முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

பீகார் : பள்ளி கழிவறையில் மாணவி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு – பொதுமக்கள் போராட்டம்!

Related News

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ராகுல் காந்தியின் மாறுபட்ட நிலைப்பாடு – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies