வேதனையில் வாடும் விவசாயிகள் : உழவர் சந்தைகளுக்கு வெளியே சட்டவிரோதமாக செயல்படும் கடைகள்!
Jul 21, 2026, 11:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேதனையில் வாடும் விவசாயிகள் : உழவர் சந்தைகளுக்கு வெளியே சட்டவிரோதமாக செயல்படும் கடைகள்!

Murugesan M by Murugesan M
Sep 5, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர்  சந்தைகளுக்கு வெளியே சட்டவிரோதமாகக் கடைகள் போடப்பட்டுள்ளதாகவும், இதனால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

சேலம் மாவட்டத்தில் 11 உழவர்  சந்தைகள் செயல்படுகின்றன. இந்த உழவர்ச் சந்தைகளின் நுழைவுவாயில் பகுதியில் இருந்து 100 மீட்டர்  தூரத்துக்குள் வேறு எந்தக் கடைகளும் போடக்கூடாது என்பது அரசின் உத்தரவு. ஆனால், இந்த உத்தரவு வெறும் காகித அளவில்தான் உள்ளது.

சேலத்தில் உழவர்ச் சந்தைகளின் நுழைவாயில்களின் இரு பகுதிகளிலும் சாலையோர  கடைகள் என்று பெயரில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் தாங்கள் மிகுந்த பாதிப்பைச் சந்தித்து வருவதாக, உழவர்ச் சந்தை விவசாயிகள் வேதனை  தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரம் குறித்து சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சிவராமன், தகுந்த ஆதாரங்களுடன் அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். அதன் விளைவாக, 16 பேர்க் கொண்ட அதிகாரிகள் குழு, சேலம் மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் ஆய்வுகளை மேற்கொண்டது. ஆனால், அந்த ஆய்வு நடைபெறும் சமயத்தில் 11 உழவர் சந்தைகளின் நுழைவுப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளும் மூடப்பட்டு விட்டன.

சந்தைகளுக்கு வெளியே போடப்படும் கடைகளில் ஆளும் கட்சியினர் மாமூல் பெற்று வருவதாகவும், இதனால், அரசு அதிகாரிகள் இதனை கண்டும் காணாமல் இருப்பதாகவும் வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஆளுங்கட்சியின் வசூலுக்காகத் தாங்கள் பகடைக்காயாகப் பயன்படுத்தப்படுவதாகவும் அவர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

விவசாயிகளும் சரி, வியாபாரிகளும் சரி அதிகாரிகளை குற்றச்சாட்டும் நிலையில், அதிகாரிகளோ ஆளுங்கட்சியினரை அனுசரித்து சென்றால்தான் தங்களால் பணியில் தொடர முடியும் எனப் புலம்புகின்றனர். எனவே, இத்தகைய சட்டவிரோத கடைகளுக்கு துணைபோகும் ஆளுங்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். விவசாயிகளுக்கான அரசு என வாயளவில் மட்டும் கூறாமல் செயல் அளவிலும் காட்ட வேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: வேதனையில் வாடும் விவசாயிகள்Farmers in pain: Shops operating illegally outside farmers' marketsசட்டவிரோதமாக செயல்படும் கடைகள்
ShareTweetSendShare
Previous Post

வர்த்தக பிரச்னைகளில் அமெரிக்க தரப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் : வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

Next Post

தஞ்சை : பெட்ரோல் குண்டு வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயற்சி!

Related News

இன்றைய தங்கம் விலை!

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் இருக்கை – வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவு!

பழனி கோயில் நில மோசடி – சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனை!

இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு!

திமுக எம்எல்ஏ கைது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தம் – காவல்துறை அராஜகம்!

முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்த திமுக எம்எல்ஏ – பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசி – இந்தியா ஒப்புதல்!

போலீசார்  துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர் – கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மற்றும் மகன் குற்றச்சாட்டு!

ஜந்தர் மந்தர் CJP கூடாரங்கள் அகற்றல் ; காவல்துறை நடவடிக்கை!

துப்பாக்கி முனையில் மிரட்டும் காவல்துறையினர்; எம்.எல்.ஏ புகார்

சவுதியை தொடர்ந்து குவைத்தையும் வளைக்க பாகிஸ்தான் முயற்சி : பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த பேச்சுவார்த்தை : சிறப்பு தொகுப்பு!

51 மதிப்பெண்ணில் தொடங்கிய பயணம் : விண்வெளியில் இந்தியாவின் புதிய மைல்கல் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க மண்ணில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கைது? : பரபரப்பை கிளப்பிய நியூயார்க் மேயர் – சிறப்பு தொகுப்பு!

56 வயது இளைஞர் – ராகுலை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி!

கோயில்களில் தரிசன கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies