இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது - வல்லுநர்கள் பெருமிதம்!
Jun 5, 2026, 07:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Oct 24, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரம்மோஸ் ஏவுகணையிடம் இருந்து இந்தியாவின் எதிரிகள் தப்பிக்க முடியாது என்றும், பிரம்மோஸ் ஏவுகணையின் மூலம் பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலத்தையும் தாக்கி அழிக்க முடியும் என்றும் பாதுகாப்பு துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்கியது. பயங்கரவாதிகளின் தளங்கள் ,பயிற்சி முகாம்கள் மட்டுமில்லாமல். பாகிஸ்தானின் விமானப் படை தளங்களையும் தாக்கி அழிக்கப் பட்டன. இந்த இராணுவ நடவடிக்கையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணைகளின் பங்கு உலக அளவில் இந்தியாவின் பாதுகாப்புத் திறனைப் பறைசாற்றியது.

‘பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ்’ உற்பத்தி தொழிற்சாலைகள் ஹைதராபாத், நாக்பூர், பிலானி, திருவனந்தபுரம் மற்றும் லக்னோவில் அமைந்துள்ளன. இந்தியா தனது முதல் பிரம்மோஸ் ஏவுகணையை 2001 ஜூன் 12 ம் தேதி சோதித்தது. 2005ஆம் ஆண்டு முதல் இந்திய கடற்படையில் பிரமோஸ் உள்ளது. 2007-ல் இந்திய ராணுவத்தில் பிரமோஸ் சேர்க்கப்பட்டது. அனைத்து விதமான வானிலைகளிலும், பகல் மற்றும் இரவு நேரங்களிலும் பயன்படுத்தப்படுவதற்கு ஏற்றவகையில் பிரம்மோஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.

பிரம்மோஸை 21ஆம் நூற்றாண்டின் ‘பிரம்மாஸ்திரம்’ என்று பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பாதுகாப்புத் தொழில் வழித்தடத்தின் கீழ் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பிரமோஸ் ஏரோஸ்பேஸ் ஆலையில் கடந்த மே மாதம் முதல், பிரமோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப் பட்டு வருகின்றன.

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் ரஷ்யாவின் NPO Mashinostroyeniya இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை வடிவமைத்துள்ளன. இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் தொகுப்பு பிரமோஸ் ஏவுகணைகளை, பயன்பாட்டுக்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்தும் அண்மையில் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பிரமோஸ் வெறும் ஏவுகணை அல்ல.

இந்தியாவின் பாதுகாப்பு நம்பிக்கையாகும். புதிய இந்தியாவின் எழுச்சியின் அடையாளமாகும். முப்படைகளிலும் முக்கிய சக்தியாக விளங்குகிறது. மேம்பட்ட ராம்ஜெட் இயந்திரத்துடன் கூடிய புதிய பிரமோஸ் ஏவுகணை அதிக உயரத்தில் பறக்கும் திறனும், கூடுதல் காற்றியக்க செயல்திறனும் பெற்றுள்ளது.

புதிய பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையின் நீட்டிக்கப்பட்ட தூரம் சுமார் 800 கிலோமீட்டர்கள் ஆகும். பாகிஸ்தானின் கிட்டத்தட்ட முழு நிலப்பரப்பையும் சொல்லப்போனால் பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலத்தையும் தாக்கும் திறன் கொண்டதாகப் புதிய பிரமோஸ் ஏவுகணை விளங்குகிறது.

தரை, கடல் மற்றும் வான் ஆகிய ஏவுதளங்களில் இருந்து செலுத்தக்கூடிய புதிய பிரமோஸ் இந்தியாவின் வழக்கமான நீண்ட தூர துல்லியமான-தாக்குதல் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது.

தடுப்பு மற்றும் தாக்குதல் ஆகிய போர் தந்திரங்களுக்கு ஏற்பப் பிரமோஸ் ஏவுகணை கச்சிதமாகச் செயல்படுகிறது என்று பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வேகம், துல்லியம் மற்றும் சக்தி ஆகியவற்றுடன் ஒப்பிடமுடியாத ஆற்றலுடன் பிரமோஸ் இந்திய முப்படைகளின் முதுகெலும்பாக மாறியுள்ளது.

Tags: Indiaindian armyIndia's new Brahmastra: Enemies can no longer escape - Experts are proud
ShareTweetSendShare
Previous Post

நாடுகடத்தப்படும் மெஹுல் சோக்சி : பள பள வசதிகளுடன் சிறையில் தயாரான ஸ்விஸ் அறை!

Next Post

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Related News

டெல்லி உணவு விடுதியில் பயங்கர தீ விபத்து – நடந்தது என்ன? : முழு விவரம்!

டெல்லி ஹோட்டல் தீ விபத்து – தலைமறைவான கட்டட உரிமையாளர் கைது!

பிரதமர் மோடியுடன் வெனிசுலா இடைக்கால அதிபர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

நீண்ட கால பிரதமர் என்ற நேருவின் சாதனையை  முறியடிக்கும் மோடி!

ரஷ்யா அனுப்பி வைத்த 4-வது S 400 வான் பாதுகாப்பு கவச வாகனம் இந்தியா வந்தடைந்தது!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு – தமிழக அரசின் நிலை என்ன என நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தின் 32  சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.37 லட்சம் பறிமுதல்!

5 ஆண்டுகளில் ரூ. 2 லட்சம் கோடி வரை முதலீடு செய்ய மத்திய அரசு உறுதி- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்!

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் – தமிழகத்தில் காலியாக உள்ள இடத்தில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அறிவிப்பு!

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்!

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருடப்பட்ட வழக்கு – ஒருவர் கைது!

மத்திய அரசின் நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துவீர் – தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி கோயில் கலப்பட நெய் விவகாரம் – திண்டுக்கல் நகரில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் எல்&டி நிறுவனத்துடன் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து – 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு!

தவெக எம்எல்ஏவை அவமதித்த சென்னை மேயர் பிரியா – புளியந்தோப்பு அரசு விழாவில் பரபரப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies