ட்ரம்ப்- ஜி ஜின்பிங் சந்திப்பு - சீனாவிடம் அடிபணிந்த அமெரிக்கா!
Aug 29, 2026, 07:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ட்ரம்ப்- ஜி ஜின்பிங் சந்திப்பு – சீனாவிடம் அடிபணிந்த அமெரிக்கா!

Murugesan M by Murugesan M
Oct 31, 2025, 08:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்- சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட சந்திப்பு நடைபெற்று முடிந்துள்ளது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இந்தச் சந்திப்பில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் கையே ஓங்கி இருந்தது என்று தகவல்கள் தெரிவித்தாலும், இந்தச் சந்திப்புக் குறித்து அதிபர் ட்ரம்ப் 12க்கு பத்து மதிப்பெண் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்றதில் இருந்தே சீனா மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வந்தார். அந்நாட்டின் மீது அதிகமான வரியை விதித்திருந்தார்.

இதற்குப் பதிலடியாக, சீனாவும் அரிய வகை தாதுக்கள் மற்றும் சோயாபீன்ஸ் உள்ளிட்ட விவசாய பொருட்கள் மற்றும் பாதுகாப்பு சார்ந்த மின்னணு பொருட்கள் ஏற்றுமதிக்கு கடும் கட்டுப் பாடுகளை விதித்தது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கு இடையில் வர்த்தக மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், இருநாட்டு அதிபர்களும் தென்கொரியாவின் பூசான் நகரில் சந்தித்து, 100 நிமிடங்களுக்கு மேலாகப் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்தச் சந்திப்பு “பெரிய வெற்றி” என்றும், சீன அதிபர் ஒரு சிறந்த மனிதர் என்றும் குறிப்பிட்ட அதிபர் ட்ரம்ப், பல முக்கியமான விஷயங்களில் நல்ல முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் தைவான் குறித்து எதுவும் பேசப்படவில்லை என்று கூறிய அதிபர் ட்ரம்ப், அடுத்த ஏப்ரல் மாதம் சீனாவுக்குச் செல்வதாகவும், அதன் பிறகு சீன அதிபர் அமெரிக்காவுக்கு வர உள்ளார் என்றும் அறிவித்துள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையிலான பெரும் மோதலின் முக்கிய புள்ளியாக இருக்கும் அரிய தாதுக்கள் பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ள அதிபர் ட்ரம்ப், உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சீன அதிபருடன் இணைந்து பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் சீனாவுக்கு 100 சதவீத கூடுதல் வரி விதிக்கப் போவதாக அறிவித்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீன அதிபருடனான சந்திப்புக்குப் பின், சீனா மீதான வரியை 57 சதவீதத்திலிருந்து 47 சதவீதமாகக் குறைப்பதாகத் தெரிவித்துள்ளார்.

முக்கிய வர்த்தக பிரச்னைகளைத் தீர்க்க இருநாடுகளும் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளதாகக் கூறியுள்ள சீன அதிபர், இரண்டு பொருளாதாரங்களுக்கும் உறுதியளிக்கும் மருந்தாகச் செயல்பட்டு, நேர்மறையான பயன்களை உலகத்துக்கு வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் முதலில் இருந்தே பேச்சுவார்த்தைகளைச் சீன அதிபரே ஆதிக்கம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவும் சீனாவும் தங்கள் தேசிய வேறுபாடுகள் காரணமாக “எப்போதும் நேருக்கு நேர் பார்ப்பதில்லை” என்று வெளிப்படையாகக் குறிப்பிட்ட சீன அதிபர், அத்தகைய வேறுபாடுகள் ஒத்துழைப்பைத் தடுக்கக் கூடாது என்றும் அழுத்தமாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

சீனாவின் அரியவகை தாதுக்களை மற்றும் மற்றும் காந்தங்களைப் பெறுவதற்கு ஈடாக, உக்ரைன் மற்றும் தைவான் குறித்த சீனாவின் கருத்தை அதிபர் ட்ரம்ப் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சந்திப்பில் நடந்த மொத்த பேச்சுவார்த்தையும் சீன அதிபரின் விதிமுறைகளின் படியே நடந்துள்ளது என்பது சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப்பின் வார்த்தைகளில் இருந்தே தெளிவாகத் தெரிகிறது என்று சர்வதேச அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: chinaamericausaDonald TrumpTrump-Xi Jinping meeting - America surrenders to China
Share
Tweet
SendShare
Previous Post

சமையல் உலகில் புது அவதாரம் எடுத்துள்ள சுசுகி நிறுவனம் : மனிதாபிமான முயற்சி -வெற்றி பெற்ற கதை!

Next Post

வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல் – 17 குழந்தைகளை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்தது ஏன்?

Related News

ரஷ்ய-இந்திய உறவு மேம்பட பிரதமர் மோடியே காரணம் : நெகிழ்ந்த ரஷ்ய அதிபர் புதின் – சிறப்பு தொகுப்பு!

“இந்தியா தர்ம சத்திரம் அல்ல” : மத்திய அமைச்சர் அமித் ஷா ஆவேசம் – சிறப்பு தொகுப்பு!

நேபாள நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்க தயார் – ட்ரம்ப் அறிவிப்பு!

திபெத் மற்றும் நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்!

திபெத் – நேபாள எல்லையில் மற்றொரு ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

நேபாள வெள்ள மீட்பு பணியில் 13,000 பேர் – பிரதமர் பாலேந்திர ஷா தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் – சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

4 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு புறப்படுகிறார் பிரதமர் மோடி – ஷாங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்!

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு நிவாரணப் பொருட்கள் : 3-வது விமானத்தை அனுப்பியது இந்தியா!

நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 84 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு – வெளியுறவுத்துறை அமைச்சகம்

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 320 இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை; வெளியுறவுத்துறை தகவல்

நேபாளத்தில் இருந்து நாடு திரும்பிய தமிழர்கள்; அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்பு

வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூல் – அரசிடம் செலுத்தாத போக்குவரத்து காவல் நிலையங்கள்!

மரிய வில்சன் இங்கிலாந்து அரசர் அல்ல – சென்னை உயர் நீதிமன்றம்

இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் – முதல்வர் விஜய் பதில் மனு தாக்கல்!

நேபாள வெள்ள பாதிப்பு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 500 ஆக அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies