டெல்லி குண்டுவெடிப்பு பயங்கரவாதிக்கு, துருக்கி, சிரியாவிலும் தொடர்பு?
Jun 22, 2026, 04:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

டெல்லி குண்டுவெடிப்பு பயங்கரவாதிக்கு, துருக்கி, சிரியாவிலும் தொடர்பு?

Murugesan M by Murugesan M
Nov 22, 2025, 02:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையில், தற்கொலைப்படை பயங்கரவாதிக்குத் துருக்கி, பாகிஸ்தான் மற்றும் சிரியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்தது அம்பலமாகியுள்ளது.

குண்டு வெடிப்பில் ஈடுபட்ட தற்கொலைப்படை பயங்கரவாதி டாக்டர் உமர் உன் நபி, கடந்த 2022ம் ஆண்டு சுமார் 20 நாட்கள் துருக்கியில் தங்கியிருந்தபோது, சிரியா பயங்கரவாத அமைப்பின் உறுப்பினரை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சந்திப்பு, தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதக் குழுவின் உகாஷா என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த நபரின் அறிவுறுத்தலின் பேரில் நடந்ததாகக் கூறப்படுகிறது. உகாஷா தற்போது பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பதுங்கி இருப்பதாக நம்பப்படுகிறது.

உமர், சக குற்றவாளிகளான மருத்துவர்கள் முஸம்மில் ஷகில் மற்றும் முஸாஃபர் ரேத்தர் ஆகியோருடன் சேர்ந்து, டெலிகிராம் மூலம் ஃபைசல், ஹாஷிம் மற்றும் உகாஷா ஆகிய மூவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளனர். இவர்கள் வெடிகுண்டுத் தயாரிப்பு வீடியோக்கள் மற்றும் வெடிபொருள் சம்பந்தப்பட்ட பொருட்களை பரிமாறியுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட மருத்துவர்களான முஸம்மில், டாக்டர் ஆதில் அகமது ரேத்தர், டாக்டர் ஷாஹீன் சயீத் மற்றும் முஃப்தி இர்பான் ஆகியோர் டெல்லி சதியில் முக்கியப் பங்கு வகித்ததுடன், இந்தியா முழுவதும் பல தொடர் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்தது NIA விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னதாக, தற்கொலைத் தாக்குதலுக்கான வாகனத்தை வாங்க உதவிய ஆமிர் ரஷித் அலி மற்றும் ட்ரோனை ராக்கெட்டாக மாற்றிய ஜாசீர் பிலால் வானி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த விசாரணை பாகிஸ்தானுடன் நிற்காமல், துருக்கி மற்றும் சிரியா வரை நீண்டுள்ளது என்ற கவலையை இந்தியப் புலனாய்வு அமைப்புகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.

Tags: Delhi blast terrorist also has connections in Turkey and Syriaடெல்லி குண்டுவெடிப்பு
ShareTweetSendShare
Previous Post

விசாரணைக்குச் சென்றவர்களின் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் : ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது பதியப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இடைக்கால தடை – உயர்நீதிமன்றம்!

Next Post

ராஜஸ்தான் : திருமண விழாவில் பங்கேற்க உதய்பூர் சென்றார் டிரம்பின் மகன்!

Related News

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies