குடியுரிமை விதிகளை தளர்த்திய கனடா : C-3 மசோதாவால் இந்தியர்களுக்கு நிவாரணம்!
Sep 12, 2026, 08:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியுரிமை விதிகளை தளர்த்திய கனடா : C-3 மசோதாவால் இந்தியர்களுக்கு நிவாரணம்!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 09:48 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கனடாவில் C-3 குடியுரிமை சீர்திருத்த மசோதா மூலம் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பயன்பெறும் சூழல் உருவாகியிருக்கிறது. இது குறித்து விரிவாகப் பார்ககலாம் இந்த செய்தித்தொகுப்பில்…

கனடா அரசு தனது குடியுரிமைச் சட்டத்தில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களை அறிவித்துள்ளது. C-3 சட்டத் திருத்தத்தின் மூலம், வம்சாவளி அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமை விதிகளை எளிதாக்கியுள்ளது. இதன் மூலம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நன்மை கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

கனடாவில் வாழும் மக்கள்தொகையில் இந்தியர்கள் பெரும் பங்கு வகிப்பதால், இந்தச் சீர்திருத்தம் இந்தியர்களுக்கு நேரடி பயன் அளிக்கும் எனத் தெரிவிக்கிறார்கள். C-3 குடியுரிமை சீர்திருத்த மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், கனடா அமைச்சர் லேனா தியாப் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

முந்தைய சட்டத்தால் குடியுரிமை இழந்தவர்கள் தற்போது கனடா வரலாம் என்றும் அழைப்பு விடுத்திருக்கிறார். தற்போதைய சட்டத்தின்படி, வெளிநாட்டில் பிறந்த கனடா பெற்றோர்களின் குழந்தைகளுக்குக் குடியுரிமை பெற அனுமதி இல்லை. 2009ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முதல் தலைமுறை வரம்பு பல வெளிநாட்டு குடும்பங்களை பாதித்தது. கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 19 -ம் தேதி ஒன்டாரியோ உயர்நீதிமன்றம் இந்தக் கட்டுப்பாடு அரசியலமைப்பிற்கு முரணானது எனத் தீர்ப்பளித்தது.

அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய விரும்பாத, கனடா அரசு பல்வேறு சீர்திருத்தங்களுடன் C-3 மசோதாவை நிறைவேற்றியுள்ளது. பிறக்கப்போகும் குழந்தைக்குக் குடியுரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காகப் பல பெண்கள் பிரசவத்திற்காக மட்டும் கனடா செல்ல வேண்டிய நிலை இதுவரை நீடித்தது.

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டம், அதற்கு விலக்களித்துள்ளது. குழந்தை பிறப்பதற்கு முன்போ அல்லது தத்தெடுப்பதற்கு முன்போ, 1,095 நாட்கள் பெற்றோர் கனடாவில் வசித்திருந்தால் போதுமானது என விதிமுறை எளிதாக்கப்பட்டுள்ளது.

இது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் நடைமுறையுடனும் ஒத்துப்போவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் மசோதா ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அமல்படுத்தும் தேதியை அரசு எப்போது அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த மாற்றங்கள் அமலுக்கு வந்தவுடன் குடியுரிமை விண்ணப்பங்கள் பெருமளவில் அதிகரிக்கும் என்று சட்ட நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags: C-3 மசோதாIndiaCanadaகனடாCanada relaxes citizenship rules: Relief for Indians with Bill C-3
Share
Tweet
SendShare
Previous Post

பிள்ளையார் சுழி போட்ட புதிய அப்டேட் : எக்ஸ் தளத்தால் சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ்!

Next Post

ஏவுகணை சோதனை : வங்காள விரிகுடா கடற்பரப்பில் விமானங்கள் பறக்கத் தடை!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies