குடியுரிமை விதிகளை தளர்த்திய கனடா : C-3 மசோதாவால் இந்தியர்களுக்கு நிவாரணம்!
Jul 29, 2026, 05:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியுரிமை விதிகளை தளர்த்திய கனடா : C-3 மசோதாவால் இந்தியர்களுக்கு நிவாரணம்!

Murugesan M by Murugesan M
Nov 26, 2025, 09:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கனடாவில் C-3 குடியுரிமை சீர்திருத்த மசோதா மூலம் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பயன்பெறும் சூழல் உருவாகியிருக்கிறது. இது குறித்து விரிவாகப் பார்ககலாம் இந்த செய்தித்தொகுப்பில்…

கனடா அரசு தனது குடியுரிமைச் சட்டத்தில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களை அறிவித்துள்ளது. C-3 சட்டத் திருத்தத்தின் மூலம், வம்சாவளி அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமை விதிகளை எளிதாக்கியுள்ளது. இதன் மூலம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நன்மை கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

கனடாவில் வாழும் மக்கள்தொகையில் இந்தியர்கள் பெரும் பங்கு வகிப்பதால், இந்தச் சீர்திருத்தம் இந்தியர்களுக்கு நேரடி பயன் அளிக்கும் எனத் தெரிவிக்கிறார்கள். C-3 குடியுரிமை சீர்திருத்த மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், கனடா அமைச்சர் லேனா தியாப் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

முந்தைய சட்டத்தால் குடியுரிமை இழந்தவர்கள் தற்போது கனடா வரலாம் என்றும் அழைப்பு விடுத்திருக்கிறார். தற்போதைய சட்டத்தின்படி, வெளிநாட்டில் பிறந்த கனடா பெற்றோர்களின் குழந்தைகளுக்குக் குடியுரிமை பெற அனுமதி இல்லை. 2009ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முதல் தலைமுறை வரம்பு பல வெளிநாட்டு குடும்பங்களை பாதித்தது. கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 19 -ம் தேதி ஒன்டாரியோ உயர்நீதிமன்றம் இந்தக் கட்டுப்பாடு அரசியலமைப்பிற்கு முரணானது எனத் தீர்ப்பளித்தது.

அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய விரும்பாத, கனடா அரசு பல்வேறு சீர்திருத்தங்களுடன் C-3 மசோதாவை நிறைவேற்றியுள்ளது. பிறக்கப்போகும் குழந்தைக்குக் குடியுரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காகப் பல பெண்கள் பிரசவத்திற்காக மட்டும் கனடா செல்ல வேண்டிய நிலை இதுவரை நீடித்தது.

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டம், அதற்கு விலக்களித்துள்ளது. குழந்தை பிறப்பதற்கு முன்போ அல்லது தத்தெடுப்பதற்கு முன்போ, 1,095 நாட்கள் பெற்றோர் கனடாவில் வசித்திருந்தால் போதுமானது என விதிமுறை எளிதாக்கப்பட்டுள்ளது.

இது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் நடைமுறையுடனும் ஒத்துப்போவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் மசோதா ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அமல்படுத்தும் தேதியை அரசு எப்போது அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த மாற்றங்கள் அமலுக்கு வந்தவுடன் குடியுரிமை விண்ணப்பங்கள் பெருமளவில் அதிகரிக்கும் என்று சட்ட நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags: C-3 மசோதாIndiaCanadaகனடாCanada relaxes citizenship rules: Relief for Indians with Bill C-3
ShareTweetSendShare
Previous Post

பிள்ளையார் சுழி போட்ட புதிய அப்டேட் : எக்ஸ் தளத்தால் சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ்!

Next Post

ஏவுகணை சோதனை : வங்காள விரிகுடா கடற்பரப்பில் விமானங்கள் பறக்கத் தடை!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies