திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது பற்றி கோயில் செயல் அலுவலரே முடிவெடுத்தது ஏன்? - மதுரை உயர் நீதிமன்ற அமர்வு சரமாரி கேள்வி!
Sep 13, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது பற்றி கோயில் செயல் அலுவலரே முடிவெடுத்தது ஏன்? – மதுரை உயர் நீதிமன்ற அமர்வு சரமாரி கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 13, 2025, 06:40 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தனி நீதிபதியின் பரிந்துரைப்படி திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் இடத்தை மாற்ற ஏன் பரிசீலிக்க கூடாது? என கோயில் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

திருப்பரங்குன்றம் வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரிய மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தன.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத் தூண் அல்ல, அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் திருப்பரங்குன்றம் தூண் சர்வே தூண் தானா என்று உறுதி செய்துள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது பற்றி கோயில் செயல் அலுவலரே முடிவெடுத்தது ஏன்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மனுதாரர் ராம ரவிக்குமார் கொடுத்த மனுவை இணை ஆணையருக்கு கோயில் செயல் அலுவலர் ஏன் அனுப்பவில்லை? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது கோயில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு அனைத்து தரப்பு வாதங்களையும் முழுமையாக கேட்டு பிறப்பிக்கவில்லை என தெரிவித்தார்.

அதேபோல் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத்தூண் அல்ல, கிரானைட் கல் தான் என்றும் கோயில் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

தொடர்ந்து நீதிபதிகள் மலை உச்சியில் உள்ள தூணை கட்டுமானம் செய்தது யார் என கேள்வி எழுப்பினர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் இல்லை என்று எப்படி கூறுகிறீர்கள் என்றும் கோயில் தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாதென கூறி விசாரணை வரும் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags: Madurai High Court benchThiruparankundram issueThiruparankundram temple.Thiruparankundram case.thiruparankundram newsthiruparankundram rowthiruparankundram protesttamil nadu governmentthiruparankundram muruganThiruparankundramthiruparankundram judgementThiruparankundram hillThiruparankundram hill issue
Share
Tweet
SendShare
Previous Post

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு ரூ. 11, 718 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் மீது தடியடி – அனுராக் சிங் தாக்கூர் கண்டனம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies