கவுகாத்தி சர்வதேச விமான நிலைய புதிய முனைய கட்டடம் - பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
Sep 13, 2026, 02:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கவுகாத்தி சர்வதேச விமான நிலைய புதிய முனைய கட்டடம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 21, 2025, 09:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வடகிழக்கின் மிகப்பெரிய விமான நிலையமான கவுகாத்தி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

ஆண்டுக்கு சுமார் 13.1 மில்லியன் பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையம், சுமார் நான்காயிரம் கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தின் முதல் முதலமைச்சரான கோபிநாத் பர்தோலோயின் பெயரிடப்பட்டுள்ள இந்த விமான நிலையத்திற்கு வெளியே அவரது 80 அடி சிலை நிறுவப்பட்டுள்ளது. அந்த சிலையையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பின்னர், புதிய முனையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, இது அசாமின் உட்கட்டமைப்பிற்கு பெரிய ஊக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் பிரதமர் மோடியுடன், அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, அம்பானி குழுமத்தின் தலைவர் கெளதம் அம்பானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நவீன விமான நிலைய வசதிகள் மற்றும் மேம்பட்ட உள்கட்டமைப்புகள், ஒரு மாநிலத்தின் புதிய வாய்ப்புகளுக்கான நுழைவுவாயில்கள் என்று குறிப்பிட்டார். கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி பெறவில்லை என்று குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, நாட்டை பிளவுபடுத்தும் வன்முறை கலாசாரம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் செழித்தோங்கியதாக குற்றம்சாட்டினார்.

அதே வேளையில், கடந்த 11 ஆண்டுகளில், பல நூறு கோடி மதிப்பிலான திட்டங்கள் மூலம் வடகிழக்கு மாநிலங்கள் மாற்றமடைந்துள்ளதையும் பிரதமர் மோடி எடுத்துக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தனது வாக்கு வங்கிக்காக காங்கிரஸ் கட்சி தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும், வங்காளம் மற்றும் அசாமில் ஊடுருவல்காரர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் கடுமையாக விமர்சித்தார்.

இறுதியாக, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறத் தயாராகி வருவதாகக் குறிப்பிட்ட அவர், 2047-க்குள் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற இலக்கை அடைய நவீன உள்கட்டமைப்பு மிக முக்கியமானது எனக் கூறினார்.

Tags: prime minister modiAssam Chief Minister Himanta Biswa SarmaPrime Minister Modi iGuwahati International AirportChief Minister of Assam
Share
Tweet
SendShare
Previous Post

மோடி, ராஜ்நாத்தை சிரிக்கவைத்த பிரியங்கா : வேறுபாடுகளை மறந்து சிரிப்பலை ஏற்படுத்திய தேநீர் விருந்து!

Next Post

ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக பூமியில் தரையிறக்கும் ‘ட்ரோக் பாராசூட் சோதனை – வெற்றிகரமாக பரிசோதனை செய்தது இஸ்ரோ!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies