கவுகாத்தி சர்வதேச விமான நிலைய புதிய முனைய கட்டடம் - பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
Apr 30, 2026, 01:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கவுகாத்தி சர்வதேச விமான நிலைய புதிய முனைய கட்டடம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 21, 2025, 09:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வடகிழக்கின் மிகப்பெரிய விமான நிலையமான கவுகாத்தி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

ஆண்டுக்கு சுமார் 13.1 மில்லியன் பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையம், சுமார் நான்காயிரம் கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தின் முதல் முதலமைச்சரான கோபிநாத் பர்தோலோயின் பெயரிடப்பட்டுள்ள இந்த விமான நிலையத்திற்கு வெளியே அவரது 80 அடி சிலை நிறுவப்பட்டுள்ளது. அந்த சிலையையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பின்னர், புதிய முனையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, இது அசாமின் உட்கட்டமைப்பிற்கு பெரிய ஊக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் பிரதமர் மோடியுடன், அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, அம்பானி குழுமத்தின் தலைவர் கெளதம் அம்பானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நவீன விமான நிலைய வசதிகள் மற்றும் மேம்பட்ட உள்கட்டமைப்புகள், ஒரு மாநிலத்தின் புதிய வாய்ப்புகளுக்கான நுழைவுவாயில்கள் என்று குறிப்பிட்டார். கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி பெறவில்லை என்று குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, நாட்டை பிளவுபடுத்தும் வன்முறை கலாசாரம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் செழித்தோங்கியதாக குற்றம்சாட்டினார்.

அதே வேளையில், கடந்த 11 ஆண்டுகளில், பல நூறு கோடி மதிப்பிலான திட்டங்கள் மூலம் வடகிழக்கு மாநிலங்கள் மாற்றமடைந்துள்ளதையும் பிரதமர் மோடி எடுத்துக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தனது வாக்கு வங்கிக்காக காங்கிரஸ் கட்சி தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும், வங்காளம் மற்றும் அசாமில் ஊடுருவல்காரர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் கடுமையாக விமர்சித்தார்.

இறுதியாக, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறத் தயாராகி வருவதாகக் குறிப்பிட்ட அவர், 2047-க்குள் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற இலக்கை அடைய நவீன உள்கட்டமைப்பு மிக முக்கியமானது எனக் கூறினார்.

Tags: prime minister modiAssam Chief Minister Himanta Biswa SarmaPrime Minister Modi iGuwahati International AirportChief Minister of Assam
ShareTweetSendShare
Previous Post

மோடி, ராஜ்நாத்தை சிரிக்கவைத்த பிரியங்கா : வேறுபாடுகளை மறந்து சிரிப்பலை ஏற்படுத்திய தேநீர் விருந்து!

Next Post

ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக பூமியில் தரையிறக்கும் ‘ட்ரோக் பாராசூட் சோதனை – வெற்றிகரமாக பரிசோதனை செய்தது இஸ்ரோ!

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies