கவுகாத்தி சர்வதேச விமான நிலைய புதிய முனைய கட்டடம் - பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
Jun 14, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கவுகாத்தி சர்வதேச விமான நிலைய புதிய முனைய கட்டடம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 21, 2025, 09:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வடகிழக்கின் மிகப்பெரிய விமான நிலையமான கவுகாத்தி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

ஆண்டுக்கு சுமார் 13.1 மில்லியன் பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையம், சுமார் நான்காயிரம் கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தின் முதல் முதலமைச்சரான கோபிநாத் பர்தோலோயின் பெயரிடப்பட்டுள்ள இந்த விமான நிலையத்திற்கு வெளியே அவரது 80 அடி சிலை நிறுவப்பட்டுள்ளது. அந்த சிலையையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பின்னர், புதிய முனையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, இது அசாமின் உட்கட்டமைப்பிற்கு பெரிய ஊக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் பிரதமர் மோடியுடன், அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, அம்பானி குழுமத்தின் தலைவர் கெளதம் அம்பானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நவீன விமான நிலைய வசதிகள் மற்றும் மேம்பட்ட உள்கட்டமைப்புகள், ஒரு மாநிலத்தின் புதிய வாய்ப்புகளுக்கான நுழைவுவாயில்கள் என்று குறிப்பிட்டார். கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி பெறவில்லை என்று குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, நாட்டை பிளவுபடுத்தும் வன்முறை கலாசாரம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் செழித்தோங்கியதாக குற்றம்சாட்டினார்.

அதே வேளையில், கடந்த 11 ஆண்டுகளில், பல நூறு கோடி மதிப்பிலான திட்டங்கள் மூலம் வடகிழக்கு மாநிலங்கள் மாற்றமடைந்துள்ளதையும் பிரதமர் மோடி எடுத்துக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தனது வாக்கு வங்கிக்காக காங்கிரஸ் கட்சி தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும், வங்காளம் மற்றும் அசாமில் ஊடுருவல்காரர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் கடுமையாக விமர்சித்தார்.

இறுதியாக, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறத் தயாராகி வருவதாகக் குறிப்பிட்ட அவர், 2047-க்குள் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற இலக்கை அடைய நவீன உள்கட்டமைப்பு மிக முக்கியமானது எனக் கூறினார்.

Tags: prime minister modiAssam Chief Minister Himanta Biswa SarmaPrime Minister Modi iGuwahati International AirportChief Minister of Assam
ShareTweetSendShare
Previous Post

மோடி, ராஜ்நாத்தை சிரிக்கவைத்த பிரியங்கா : வேறுபாடுகளை மறந்து சிரிப்பலை ஏற்படுத்திய தேநீர் விருந்து!

Next Post

ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக பூமியில் தரையிறக்கும் ‘ட்ரோக் பாராசூட் சோதனை – வெற்றிகரமாக பரிசோதனை செய்தது இஸ்ரோ!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies