மோடி, ராஜ்நாத்தை சிரிக்கவைத்த பிரியங்கா : வேறுபாடுகளை மறந்து சிரிப்பலை ஏற்படுத்திய தேநீர் விருந்து!
Jul 29, 2026, 07:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மோடி, ராஜ்நாத்தை சிரிக்கவைத்த பிரியங்கா : வேறுபாடுகளை மறந்து சிரிப்பலை ஏற்படுத்திய தேநீர் விருந்து!

Murugesan M by Murugesan M
Dec 20, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடுமையான வாதங்களும், பரபரப்பான மோதல்களும் நிறைந்த குளிர்கால கூட்டத்தொடரின் முடிவில், மக்களவை சபாநாயகர் ஏற்பாடு செய்த பாரம்பரிய தேநீர் விருந்து, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே சிரிப்பும், நல்லிணக்கமும் மலர்ந்த தருணமாக அமைந்தது. இது குறித்த செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்.

நாடாளுமன்றத்தில் அண்மையில் நடந்து முடிந்த குளிர்கால கூட்டத்தொடரின்போது, உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒருவர் கடுமையாக விவாதித்து கொண்டனர். சில நேரங்களில் உரையாடல்கள் கடுமையான வாதங்களாக மாறிக் கூட்டத்தொடரையே பரபரப்பாக்கியது. ஆனால் அமர்வின் முடிவில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்பாடு செய்திருந்த பாரம்பரிய தேநீர் விருந்து, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே பல சிறப்பான தருணங்களை ஏற்படுத்தின.

பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்ற இந்தத் தேநீர் விருந்தில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, திமுக எம்.பி ஆ.ராசா, சமாஜ்வாதி கட்சி எம்.பி தர்மேந்திர யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி சுப்ரியா சுலே, சிபிஐ தலைவர் டி.ராஜா உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். அப்போது நடந்த கலந்துரையாடலில் பிரியங்கா காந்தி, தனது தொகுதியான வயநாட்டில் இருந்து கொண்டுவரும் ஒரு விசேஷ மூலிகையை அலர்ஜிக்காகப் பயன்படுத்துவதை பகிர்ந்து கொண்டார்.

அதைக்கேட்ட பிரதமர் மோடியும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் புன்னகைத்தபடி, அவரிடம் அதுகுறித்து கேட்டறிந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பிரியங்கா காந்தி, பிரதமர் மோடியின் ஜோர்டான், எத்தியோபியா மற்றும் ஓமன் பயண அனுபவங்கள் குறித்து கேட்டறிந்தார்.

இதற்கிடையே சமாஜ்வாதி கட்சி எம்.பி-யான தர்மேந்திர யாதவ், அமர்வை இன்னும் சில நாட்கள் நீட்டித்திருக்கலாம் என கூறினார். அதற்குப் பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, தர்மேந்திர யாதவ் மிகவும் சத்தமாகப் பேசுபவர் என்பதை குறிப்பிட்டு, அமர்வு நீண்டால் அவரது தொண்டைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அதனை தவிர்த்துவிட்டதாகக் கிண்டலடித்தார். அதே நேரத்தில், புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் எல்லா எம்.பி-க்களும் அமர்ந்து பேச ஒரு மைய மண்டபம் அமைக்கலாம் என்ற யோசனை வந்தபோது, அது ஓய்வுபெற்றபின் பயன்படுத்திக்கொள்வதற்காக எனப் பிரதமர் மோடி நகைச்சுவையாகப் பேசியது அங்குச் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

தேநீர் விருந்தின் இறுதியில் அமர்வில் சிறப்பாகச் செயல்பட்டதாகச் சில எதிர்க்கட்சி எம்.பி-க்களை, பிரதமர் மோடி பாராட்டிப் பேசியதும் அனைவர் மத்தியிலும் கவனம் பெற்றது. முந்தைய நாடாளுமன்ற அமர்வின்போது ராகுல் காந்தி உள்ளிட்ட சில எதிர்க்கட்சி தலைவர்கள், சபாநாயகர் நியாயமாக நடக்கவில்லை எனக்கூறி அவர் ஏற்பாடு செய்த தேநீர் விருந்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

ஆனால் தற்போதைய குளிர்கால அமர்வில் அந்த நிலைபாடு மாறி, அனைத்து எதிர்க்கட்சிகளும் பாரம்பரிய தேநீர் விருந்தில் கலந்துகொண்டனர். இந்த முடிவிற்கு காங்கிரஸ் கட்சி தலைமையேற்றது என்பதையும் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உறுதிபடுத்தினார்.

மொத்தத்தில், கடுமையான அரசியல் மோதல்களுக்கிடையிலும், இந்தப் பாரம்பரிய விருந்து நாடாளுமன்ற நல்லிணக்கத்தின் ஒரு சின்னமாக அமைந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

Tags: PM ModiparlimentPriyanka made ModiRajnath laugh: Tea party that forgot differences and made them laugh
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவை கலங்கடிக்கும் Epstein Files!

Next Post

கவுகாத்தி சர்வதேச விமான நிலைய புதிய முனைய கட்டடம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies