ஜல்லிக்கட்டு காளைகளுக்கு GPS - தமிழக அரசுக்கு காளை வளர்ப்போர் கோரிக்கை..!
Sep 14, 2026, 12:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு GPS – தமிழக அரசுக்கு காளை வளர்ப்போர் கோரிக்கை..!

Manikandan by Manikandan
Jan 7, 2026, 06:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வரும் நிலையில் காளையை தயார்படுத்தும் பணிகளும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக காளையை பாவித்து அவற்றை ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயார்படுத்தும் காளை வளர்ப்போர் சிலர் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அய்யனார் குளத்தைச் சேர்ந்தவர் தான் இந்தச் சுதந்திரா தேவி. காளை வளர்ப்பதில் அளப்பரிய பற்று கொண்டிருக்கும் சுதந்திரா தேவி மட்டுமல்ல அவரின் ஒட்டுமொத்த குடும்பமும் காளை வளர்ப்பில் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகின்றனர்.

தலைமுறை, தலைமுறையாகக் காளை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் சுதந்திரா தேவியின் குடும்பம் 22 காளைகளைத் தங்களின் குடும்ப உறுப்பினர்களாகவே எண்ணி வளர்த்து வருகின்றனர்.

சுதந்திரா தேவியைப் போலவே அவரது பேத்திக்கும் காளை வளர்ப்பில் அதீத ஈடுபாடு உள்ளது. 3 ஆம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே காளை வளர்ப்பில் ஈடுபடத் தொடங்கிய ஹாசிணி, தற்போது வரை தனது பாட்டி சுதந்திரா தேவிக்கு உறுதுணையாக இருந்து காளைகளைக் கவனித்து வருகிறார்.

மதுரை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குக் காளைகளை அழைத்துச் செல்லும்போது, காளைகளை அவிழ்த்துவிடுவதற்கான போதிய ஏற்பாடின்மை, பரிசுகள் வழங்குவதில் குளறுபடிகள் எனப் பல்வேறு சிரமங்கள் இருக்கும் நிலையில், அதனைக் களைவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அதோடு, ஜல்லிக்கட்டு களத்தில் போதுமான சேசிங் பாயிண்ட் இல்லாத நிலையில், வழித்தவறி காளைகள் செல்வதை தடுக்க அரசே முன்வந்து காளைகளில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காளை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர் பொங்கல் திருநாளுக்கான ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாகி வரும் நிலையில், அதற்கேற்ப காளைகளைத் தயார்படுத்தும் பணியும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

காளைகளும், காளையர்களும் பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஈடுபடுவதை உரிய ஏற்பாடுகளின் மூலம் அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

 

 

Tags: MaduraipongalUsilampatti2026 jallikattupongal 2026
Share
Tweet
SendShare
Previous Post

தொகுதி பிரச்சனைகள் குறித்து கேள்வி கேட்டால் மிரட்டுவதா? அண்ணாமலை கேள்வி!

Next Post

வெனிசுலா அதிபரை சிறைபிடிக்க இதுதான் காரணமா? – டிரம்ப்-ஐ வெறுப்பேற்றிய மதுரோவின் டான்ஸ்! – சிறப்பு தொகுப்பு

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies