கொல்கத்தா ஐ-பேக் அலுவலகத்தில் ED சோதனை : மம்தாவின் தலையீட்டால் சர்ச்சை : சிறப்பு தொகுப்பு!
Sep 14, 2026, 04:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொல்கத்தா ஐ-பேக் அலுவலகத்தில் ED சோதனை : மம்தாவின் தலையீட்டால் சர்ச்சை : சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 9, 2026, 01:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கொல்கத்தாவில் I-PAC நிறுவனம் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகள் மற்றும் அதில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நேரடி தலையீடு குறித்த பரஸ்பர குற்றச்சாட்டுகள், மேற்கு வங்க அரசியலில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்…

கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஐ-பேக் (I-PAC) என்ற அரசியல் ஆலோசனை நிறுவனம் தொடர்புடைய இடங்களில், அண்மையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

மேற்கு வங்க நிலக்கரி கடத்தல் மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கின் ஒரு பகுதியாக நடந்த இந்த சோதனைகள், மேற்கு வங்க அரசியலில் கடும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன.

பல கோடி ரூபாய் அளவிலான பணப்பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்தும் நோக்கில், ஐ-பேக் நிறுவனத்தின் அலுவலகம், அதன் இணை நிறுவனர் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஐடி பிரிவு தலைவர் பிரதீக் ஜெயின் வீடு உள்ளிட்ட இடங்களில், மத்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனைகள் நடந்துகொண்டிருந்தபோது முதலமைச்சர் மம்தா பானர்ஜி திடீரென பிரதீப் ஜெயின் வீட்டிற்கு சென்றது இந்த விவகாரத்தை கூடுதல் பரபரப்பாக்கியது.

சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் வரை அங்கிருந்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அங்கிருந்து பச்சை நிற கோப்புடன் வெளியே வந்த காட்சிகள் அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதங்களை ஏற்படுத்தின. அதன் தொடர்ச்சியாக சால்ட் லேக் செக்டார்-5-ல் உள்ள ஐ-பேக் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு மம்தா நேரில் சென்றார்.

இதனால் அங்கு மாநில காவல்துறை உயரதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் டிஎம்சி கட்சி தலைவர்கள் குவிந்திருந்தனர். மத்திய படைகள் கட்டடத்தை சீல் செய்திருந்த நிலையில், முதலமைச்சர் மம்தா அவற்றை மீறி அலுவலகத்திற்குள் சென்று சோதனையில் ஈடுபட்டிருந்த அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் நீண்ட வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

குறிப்பாக அமலாக்கத்துறையின் சோதனைகள் அனைத்தும் முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது எனவும், 2026 சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து டிஎம்சி-யின் வேட்பாளர் பட்டியல், தேர்தல் உத்தி மற்றும் முக்கிய தரவுகளை கைப்பற்ற முயற்சி நடப்பதாகவும் மம்தா குற்றம் சாட்டினார்.

அத்துடன் இது ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் என குறிப்பிட்டார். தொடர்ந்து அமலாக்கத்துறை சோதனைகளை கண்டிக்கும் வகையில் ஐ-பேக் அலுவலகம் முன்பு அமர்ந்து அவர் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். அத்துடன் இந்த விவகாரத்தை குறிப்பிட்டு பெரும் போராட்ட பேரணியை டிஎம்சி கட்சி அறிவித்துள்ளது.

இதற்கிடையே, இது தொடர்பாக விளக்கமளித்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், எந்த அரசியல் கட்சியையும் குறிவைக்கும் நோக்கில் இந்த சோதனைகள் நடத்தப்படவில்லை எனவும், சட்டப்படி நடைபெற்று வரும் விசாரணையின் ஒருபகுதியாகவே இவை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் சோதனைகளின்போது முதலமைச்சர் மம்தா பேனர்ஜி மற்றும் மாநில காவல்துறை உயரதிகாரிகள் இணைந்து, ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், இது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் நடைபெறும் விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகவும், இது தொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், அரசியல் காரணங்களுக்காக அமலாக்கத்துறையினர் தங்களை குறிவைத்து சோதனைகள் நடத்துவதாகக் கூறி, ஐ-பேக் நிறுவனமும் இடைக்கால தடை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

முந்தைய அமலாக்கத்துறை விசாரணை விவரங்களின்படி, 2020-ம் ஆண்டு சிபிஐ பதிவு செய்த நிலக்கரி கடத்தல் வழக்கிலிருந்தே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அனுப் மாஜி தலைமையிலான கும்பல், நிலக்கரி நிறுவனத்தின் சுரங்கங்களில் இருந்து சட்டவிரோதமாக நிலக்கரி எடுத்து, அதில் கிடைத்த பணத்தை ஹவாலா வழியாக பரிமாற்றம் செய்ததாகவும், அந்த பணத்தில் ஒரு பகுதி ஐ-பேக் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த தொகை, கடந்த 2022-ம் ஆண்டு நடந்த கோவா சட்டமன்றத் தேர்தலில், டிஎம்சி கட்சிக்கான அரசியல் ஆலோசனை சேவைக்காக வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், மத்திய விசாரணை அமைப்பின் பணியில் முதலமைச்சர் நேரடியாக தலையிட்டுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. மேலும், மம்தா பானர்ஜிக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

நடப்பாண்டு மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஐ-பேக் நிறுவனம் – அமலாக்கத்துறை விவகாரம் மேற்கு வங்க அரசியலில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

Tags: Enforcement Directoratewest bengalChief Minister Mamata BanerjeeED RAID IN I-PAC
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தினகரன் சந்திப்பு!

Next Post

மதுரை, உசிலம்பட்டி மலர்ச்சந்தைகளில் வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்வு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies