T 20 உலகக்கோப்பை புறக்கணிப்பு - வங்கதேசத்தை சிக்க வைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்! சிறப்பு தொகுப்பு
Apr 29, 2026, 08:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

T 20 உலகக்கோப்பை புறக்கணிப்பு – வங்கதேசத்தை சிக்க வைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்! சிறப்பு தொகுப்பு

Manikandan by Manikandan
Feb 22, 2026, 02:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டி20 உலகக் கோப்பை போட்டிகளை வங்கதேசம் புறக்கணித்ததற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி தான் காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்த ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவில் விளையாட மறுத்த வங்கதேசம் தங்கள் போட்டிகளை வேறு நாட்டில் வைக்குமாறு கோரிக்கை வைத்தது.

இந்த கோரிக்கையை இந்திய கிரிக்கெட் வாரியம் நிராகரித்ததையடுத்து, டி 20 உலக கோப்பை போட்டியை வங்கதேசம் புறக்கணிப்பதாக அறிவித்தது. வங்கதேசத்துக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி போட்டியில் சேர்க்கப்பட்டது.

வங்கதேசத்துக்கு ஆதரவாக பாகிஸ்தானும் போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்து,போட்டியில் பங்கேற்க சில நிபந்தனைகளையும் விதித்தது.

பிறகு வருமானப் பங்கில் இழப்பு ஏற்படும் என்ற காரணத்தால், தனது நாட்டு அணியை டி 20 உலக கோப்பை போட்டியில் விளையாடுமாறு பாகிஸ்தான் பிரதமர் உத்தரவிட்டார். இலங்கையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது.

இந்நிலையில் வங்கதேசத்தின் புதிய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அமினுல் ஹக் பதவியேற்ற உடனேயே, இந்திய துணை உயர் ஆணையரைச் சந்தித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் இந்தியாவுடனான உறவுகளை சரிசெய்ய வங்கதேசம் ஆர்வமாக உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில், டி 20 உலக கோப்பை போட்டியைப் புறக்கணிக்கும் வங்க தேசத்தின் முடிவுக்கு பின்னணியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வியின் பங்கு இருந்தது என்று வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், வங்கதேச கிரிக்கெட் வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை ஐபிஎல் அணியில் இருந்து நீக்கிய பிறகும், டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட வங்கதேசம் தயாராகவே இருந்ததாக தெரிவித்த அந்த அதிகாரி, ஐசிசியின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் இருந்தபோதிலும், திடீரென வங்கதேசம் தனது புறக்கணிக்கும் முடிவை எடுத்ததாக கூறியுள்ளார்.

இதற்கிடையே ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும், வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் செயலாளருமான சையத் அஷ்ரபுல் ஹக், வாரியத்தின் தலைவர் அமினுல் இஸ்லாமை, நக்வி தவறாக வழிநடத்தியாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் வங்கதேச கிரிக்கெட் வீரர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, அரசை திருப்திப்படுத்துவதில் மட்டுமே BCB தலைவர் அமினுல் இஸ்லாம் கவனம் செலுத்தியதாக விமர்சித்த ஹக், அவர் பாகிஸ்தானின் பொறியில் சிக்கியதாகவும் கூறியுள்ளார்.

கூடுதலாக முன்னாள் விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருலின் வழிகாட்டுதலின் படியே வங்கதேசம் உலகக் கோப்பை போட்டிகளைப் புறக்கணித்தது என்றும் ஹக் தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ மற்றும் ஐசிசியிடம் முறையாக கோரிக்கை வைத்திருந்தால், இரு அமைப்புகளும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கவலைகளை நிவர்த்தி செய்திருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

டி 20 உலக கோப்பையைப் புறக்கணிப்பது வங்கதேச கிரிக்கெட் ரசிகர்களுக்கும் செய்யும் அநீதியாகும் என்று கூறிய ஹக் , வங்கதேசத்துக்கே இது ஏமாற்றமாகவும் அவமானமாகவும் உள்ளது என்று வருத்தப்பட்டுள்ளார்.

முன்னாள் விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருலின் தவறான வழிகாட்டுதல், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நக்வியின் அழுத்தம் ஆகியவற்றால் வாங்க தேச கிரிக்கெட் வாரியத் தலைவர் தலைவர் அமினுல் இஸ்லாம் அரசியல் காரணங்களுக்காக நாட்டின் கிரிக்கெட் வீரர்களுக்குத் துரோகம் செய்துள்ளார் என்று கிரிக்கெட் ரசிகர்களும் கூறுகின்றனர்.

Tags: responsibleBangladesh boycottchief Mohsin Naqvipakistant20 world cupPakistan Cricket Board
ShareTweetSendShare
Previous Post

தாயால் கைவிடப்பட்ட குரங்கை ஆரத்தழுவி ஏற்றுக்கொண்ட வீடியோ வைரல்!

Next Post

தேர்தலுக்காக திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் அவசர கோலத்தில் கும்பாபிஷேகம்!

Related News

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies