தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கை வெளிச்சம் போட்டுக் காட்டும் நாங்குநேரி இரட்டை கொலை சம்பவம்-எல்.முருகன் கண்டனம்!
Apr 29, 2026, 07:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கை வெளிச்சம் போட்டுக் காட்டும் நாங்குநேரி இரட்டை கொலை சம்பவம்-எல்.முருகன் கண்டனம்!

Manikandan by Manikandan
Mar 3, 2026, 01:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதை கும்பலின் அட்டூழியத்தை தடுக்க திராணியற்ற
திமுக அரசு என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே நேற்றிரவு இருசக்கர வாகனங்களில் வந்த ஒரு கும்பல், அப்பகுதியில் இருந்த அப்பாவி மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர் என தெரிவித்தார்

மேலும் போதையில் வந்த அந்த கும்பல், பயங்கர ஆயுதங்களை கொண்டு நடத்திய தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனனர். இந்தச் சம்பவம் தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது என தெரிவித்தார்

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என கூறினார்

தமிழகத்தில் கொடூர கொலைகளும், கொலை முயற்சி சம்பவங்களும் நடைபெறாத நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என தெரிவித்தார்

போதை கும்பல்களை கட்டுப்படுத்த முடியாமல் போலி திராவிட மாடல் திமுக அரசு திணறுகிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதையும், போதைப் பொருட்களின் நடமாட்டம் தமிழகம் முழுவதும் புரையோடிப் போயிருப்பதையும் இந்த கொடூர சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது என எல்.முருகன் விமர்சித்துள்ளார்!

காவல் துறை மீதும், இந்த அரசு மீதும் குற்றம் செய்பவர்களுக்கும் பயம் இல்லாததால் தொடர் சம்பவங்கள் தமிழகத்தில் நடந்து வருகின்றன தமிழகத்தில் காவல்துறை இருக்கிறதா? என்ற சந்தேகமும் எழுகிறது. என கேள்வியெழுப்பியுள்ளார்

இந்த கொடூர கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை தமிழக காவல்துறையினர் உடனடியாக கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்

கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்

தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு சீர்குலைவை தடுக்க வேண்டிய முதலமைச்சர் ஸ்டாலின்
எதை பற்றியும் கவலைப்படுவதில்லை. மக்களின் பாதுகாப்பையும் மதிக்காத திமுக அரசுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்

Tags: tn bjpmurdermkstalinNanguneridmk newstamilnadubjpDMKlmurugan
ShareTweetSendShare
Previous Post

நாங்குநேரியில் பயங்கரம்: பெட்ரோல் குண்டு வீசி சரமாரி வெட்டிய மர்ம மர்மநபர்களால் வடமாநில தொழிலாளி உள்பட 2 பேர் பலி

Next Post

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் அர்ஜுன் ராம் மேக்வால் சாமி தரிசனம்!

Related News

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More

அண்மைச் செய்திகள்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

கோடை வெயில் எதிரொலி – டெல்லியில் பள்ளிகள் நேரம் மாற்றம்!

மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies