திருவண்ணாமலை அருகே 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது அதிர்ச்சி அளிக்கிறது பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில்,இந்த சம்பவம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு மற்றொரு சான்று என தெரிவித்துள்ளார். தமிழகத்தை இத்தகைய மோசமான நிலைக்குத் தள்ளியதே திமுக ஆட்சி தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மன நல ஆலோசனை வழங்க வேண்டும் என்றும், இதில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
















