கொள்ளையடித்த பணத்தை வாக்காளர்களுக்கு திமுக கொடுப்பதாகவும், தேர்தலுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவு செய்வதாகவும், பா.ம.க தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
மேட்டூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வெங்கடாஜலத்தை ஆதரித்து மேச்சேரியில் அவர் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது, தமிழ்நாட்டின் தாய்மார்கள் திமுகவுக்கு ஓட்டுகூட போடக்கூடாது என்றும், ஸ்டாலின் குடும்பம் தவிர தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களும் ஏழைகளாகத்தான் இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
திமுக வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்றும், கொடுங்கோன்மையான திமுக ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும் என்றும் அன்புமணி கேட்டுக்கொண்டார்.
















