புதுக்கோட்டையில் வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை அனுப்பும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் ஆயிரத்து 683 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்னன.
இந்நிலையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கண்ட்ரோல் யூனிட்டுகள், வி.வி.பேட் யூனிட்டுகள் ஆகியவற்றை தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
















