தமிழ்நாட்டில் இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், 5 ஆயிரத்து 949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்னாயக் அறிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் 62 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
3.60 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சிவிஜில் மூலம் 5,634 புகார்கள் வந்துள்ளன என்றும், அதில் 17 நிலுவையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
14.59 லட்சம் முதல் முறை வாக்காளர்கள் உள்ளதாகவும், “5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
















