கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, ஸ்ரீ சாரதா நிகேதன் அன்பு இல்லம் வளாகத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
ஓசூர் அருகே மத்திகிரி பகுதியில் உள்ள ஸ்ரீசாரதா நிகேதன் அன்பு இல்லம் கடந்த 1994ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த இல்லத்தில், பெற்றோரை இழந்தவர்கள், ஒற்றை பெற்றோர் மற்றும் ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் தங்கிப் பயின்று வருகின்றனர்.
இங்கு மாணவர்களுக்கு கல்வி அறிவு மட்டுமின்றி, தேசிய தெய்வீக பண்புகள் போதிக்கப்படுகின்றன. இங்கு மாணவர்கள் பலரும் நன்கு பயின்று திருமணம் செய்து சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
சமீபகாலமாக ஸ்ரீசாரதா நிகேதன் அன்பு இல்லத்தில் மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்து வருவதால் கட்டிட பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக அதே வளாகத்தில் புதிதாக கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக ஆர்.எஸ்.எஸ். அகில பாரத சேவா பிரமுகர் செந்தில்குமார், ராஷ்ட்ரிய சேவா பாரதி அறங்காவலர் ரபு மனோகர், கிருஷ்ணகிரி ஜில்லா ஆர்.எஸ்.எஸ் முன்னாள் மாவட்ட தலைவர் அன்னையப்பா, ஆர்.எஸ்.எஸ் சேலம் கோட்ட தலைவர் சந்திரசேகர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆர் எஸ் எஸ் தலைவர் சங்கர்லால், ஆர்.எஸ்.எஸ் மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
















