மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே வாக்குச்சாவடி மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த தலைமை காவலர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொறையாறில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. இதற்காக தலைமை காவலர் விக்னேஷ் என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பிரபாகரன் என்பவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவலரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் தலைமை காவலர் விக்னேஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே தாக்குதல் நடத்திய பிரபாகரனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முன்விரோதம் காரணமாக தாக்குதல் சம்பவம் நடைபெற்றது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
















