கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னையில் தங்கி பணியாற்றி வருபவர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக, சென்னையில் இருந்து தென் மாவட்டத்தை நோக்கி செல்லும் பொதுமக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அதிக அளவில் குவிந்தனர்.
கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இருப்பினும், அரசு பேருந்துகள் இல்லாததால் தனியார் பள்ளி, கல்லூரிகள் வாகனங்களில் பொதுமக்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
















